وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ

(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக


وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ

பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-


وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ

ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-


إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ

நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.


فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ

எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,


وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ

நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,


فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ

அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.


وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ

ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,


وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ

இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,


فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ

அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.



الصفحة التالية
Icon