ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.


خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ

'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.


ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.


ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.


عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.


كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ

எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.


أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ

அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,


إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ

நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.


أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ

தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?


عَبۡدًا إِذَا صَلَّىٰٓ

ஓர் அடியாரை - அவர் தொழும்போது,



الصفحة التالية
Icon