surah.translation .

(நபியே!) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா?
அவன்தான் படைத்தான்; இன்னும் ஒழுங்கு படுத்தினான்.
அவன்தான் நிர்ணயம் செய்தான்; இன்னும் வழிகாட்டினான்.
அவன்தான் பசுமையான புல்லை வெளியாக்கினான். (முளைக்க வைத்தான்.)
(பிறகு) அதைக் கருத்த (காய்ந்துபோன) சருகாக ஆக்கினான்.
(நபியே! அல்குர்ஆனை) உமக்குக் கற்பிப்போம். (அதிலிருந்து எதையும்) நீர் மறக்க மாட்டீர்,
அல்லாஹ் நாடியதைத் தவிர. நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிவான்.
சொர்க்கப் பாதையை உமக்கு இலகுவாக்குவோம்.
ஆகவே, அறிவுரை பலனளித்தால் அறிவுரை கூறுவீராக!
(அல்லாஹ்வை) பயப்படுகிறவர் (அதன் மூலம்) அறிவுரை பெறுவார்.
இன்னும் பெரும் துர்ப்பாக்கியவான் அதைத் தவிர்த்துவிடுவான்.
(அவன்) மாபெரும் (நரக) நெருப்பில் பற்றி எரிவான்.
பிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும் வாழவும் மாட்டான்.
(இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார்.
இன்னும் (அவர்) தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்தார்; இன்னும் (ஐவேளை) தொழுதார்.
மாறாக, (அற்ப) உலக வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.
மறுமையோ மிகச் சிறந்தது; என்றும் நிலையானது.
நிச்சயமாக இது முந்திய வேதங்களிலும் (கூறப்பட்டு) இருக்கிறது.
(இது) இப்றாஹீம் இன்னும் மூஸா உடைய வேதங்களில் (இருக்கிறது).