surah.translation .

(முற்)பகலின் மீது சத்தியமாக!
பகலின் மீது சத்தியமாக! (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும் போது,
ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி பலதரப்பட்டதுதான்.
ஆக, யார் தர்மம் புரிந்து, இன்னும் அல்லாஹ்வை அஞ்சினாரோ,
(இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை உண்மைப்படுத்தினாரோ,
சொர்க்கப் பாதையை அவருக்கு இலகுவாக்குவோம்.
ஆக, யார் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வின் அருளை விட்டுத் தன்னை) தேவையற்றவனாகக் கருதினானோ,
இன்னும் (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை பொய்ப்பித்தானோ,
அவனுக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம்.
அவன் (நரகில்) விழும்போது, அவனுடைய செல்வம் அவனுக்குப் பலனளிக்காது.
நிச்சயமாக நேர்வழி காட்டுவதுதான் நம்மீது (கடமை).
நிச்சயமாக மறுமையும் இம்மையும் நமக்கே (உரியது)!
ஆகவே, கொழுந்துவிட்டெரிகின்ற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்.
அதில் பற்றி எரிய மாட்டான் பெரும் தீயவனைத் தவிர.
எவன் (நம் மார்க்கத்தை) பொய்ப்பித்தான்; இன்னும் புறக்கணித்தான்.
அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர்தான் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்.
(அவர்) மனத்தூய்மையை நாடியவராக தன் செல்வத்தைத் (தர்மம்) கொடுக்கிறார்.
ஒருவரின் கூலி கொடுக்கப்படும்படியான உபகாரம் ஏதும் அவரிடம் இல்லை.
மிக உயர்ந்தவனான தன் இறைவனின் முகத்தைத் தேடுவதைத் தவிர (வேறு நோக்கம் அவருக்கில்லை).
(அல்லாஹ்வின் வெகுமதியால்) திட்டமாக (அவர்) திருப்தியடைவார்.