ترجمة معاني سورة الحجر باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف
آية رقم 1
அலிஃப் லாம் றா. (நபியே!) இவை, (முந்திய) வேதங்கள் இன்னும் தெளிவான (இந்த) குர்ஆனின் வசனங்களாகும்.
آية رقم 2
நிராகரித்தவர்கள், தாங்கள் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே! என்று (மறுமையில்) பெரிதும் விரும்புவார்கள்.
آية رقم 3
(நபியே!) அவர்களை விடுவீராக! அவர்கள் புசிக்கட்டும், இன்னும் அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும். அவர்களுடைய ஆசை அவர்களை மறக்கடிக்கட்டும். பின்னர் (அவர்கள் தங்களது கெட்ட முடிவை) அறிவார்கள்.
آية رقم 4
எவ்வூரையும் அதற்கு குறிப்பிட்ட தவணை இருந்தே தவிர நாம் (உடனே) அழிக்கவில்லை.
آية رقم 5
எந்த சமுதாயமும் தங்கள் தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
آية رقم 6
(உம்மை நோக்கி) “ஓ அறிவுரை இறக்கப்பட்டவரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான்”என்று கூறுகின்றனர்.
آية رقم 7
“நீர் உண்மையாளர்களில் இருந்தால் நம்மிடம் வானவர்களை நீர் கொண்டு வரலாமே?” (என்று கேட்கின்றனர்)
آية رقم 8
சத்தியத்தைக் கொண்டே தவிர வானவர்களை நாம் இறக்க மாட்டோம். (அப்படி இறக்கினால்) அப்போது அவர்கள் அவகாசமளிக்கப்படுபவர்களாக இருக்கமாட்டார்கள்.
آية رقم 9
நிச்சயமாக நாம்தான் அறிவுரையை (உம்மீது) இறக்கினோம். இன்னும் நிச்சயமாக நாம் அதை பாதுகாப்பவர்கள் ஆவோம்.
آية رقم 10
(நபியே!) உமக்கு முன்னர் முன்னோர்களின் (பல) பிரிவுகளில் திட்ட வட்டமாக (பல தூதர்களை) அனுப்பினோம்.
آية رقم 11
அவர்களிடம் எந்த ஒரு (இறைத்) தூதரும் வருவதில்லை அவரை அவர்கள் பரிகசிப்பவர்களாக இருந்தே தவிர.
آية رقم 12
ﮰﮱﯓﯔﯕ
ﯖ
(முன்னோர் செய்த) அவ்வாறே அ(ந்த நிராகரிப்பு தனத்)தை (இக்)குற்றவாளிகளின் உள்ளங்களிலும் புகுத்துகிறோம்.
آية رقم 13
(ஆகவே,) அவர்கள் இவரை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். முன்னோரின் வழிமுறை சென்றுவிட்டது. (அவர்களைப் போலவே இவர்களும் அழிவர்.)
آية رقم 14
அவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு வாசலை நாம் திறந்து, அதில் பகலில் அவர்கள் ஏறுபவர்களாக ஆகினாலும்...
آية رقم 15
அவர்கள் (நம்பிக்கை கொள்ளாமல்), “எங்கள் கண்கள் நிச்சயம் மயக்கப்பட்டு விட்டன; இல்லை, நாங்கள் சூனியம் செய்யப்பட்ட மக்கள்”என்றே கூறுவர்.
آية رقم 16
திட்டவட்டமாக வானத்தில் பெரிய நட்சத்திரங்களை அமைத்து, பார்ப்பவர்களுக்கு அவற்றை அலங்காரமாக்கினோம்.
آية رقم 17
ﭙﭚﭛﭜﭝ
ﭞ
விரட்டப்பட்ட எல்லா ஷைத்தான்களை விட்டு அதைப் பாதுகாத்தோம்.
آية رقم 18
எனினும், எவன் ஒட்டுக் கேட்பானோ, அவனை தெளிவானதோர் எரி நட்சத்திரம் பின் தொடரும்.
آية رقم 19
பூமியை நாம் விரித்தோம்; அதில் அசையாத மலைகளை நிறுவினோம்; அதில் (நிறுவையில்) நிறுக்கப்படும் எல்லாவற்றையும் முளைக்க வைத்தோம்.
آية رقم 20
அதில் உங்களுக்கும், நீங்கள் உணவளிப்பவர்களாக இல்லாதவர்களுக்கும் (நாம்தான்) வாழ்வாதாரங்களை அமைத்தோம்.
آية رقم 21
எப்பொருளும் இல்லை அதன் பொக்கிஷங்கள் நம்மிடம் இருந்தே தவிர. குறிப்பிடப்பட்டதோர் அளவிலே தவிர அதை இறக்க மாட்டோம்.
آية رقم 22
(மேகத்தை) கருக்கொள்ள வைக்கக்கூடிய காற்றுகளை அனுப்புகிறோம். அம்மேகத்திலிருந்து மழை நீரை இறக்கி, அதை உங்களுக்குப் புகட்டுகிறோம். அதை நீங்கள் சேகரிப்பவர்களாக இல்லை.
آية رقم 23
ﮕﮖﮗﮘﮙﮚ
ﮛ
நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; இன்னும் மரணிக்க வைக்கிறோம். நாமே (அனைத்திற்கும்) அனந்தரக்காரர்கள்!
آية رقم 24
திட்டவட்டமாக உங்களில் முன் சென்றவர்களையும் அறிந்தோம்; (உங்களில்) பின் வருபவர்களையும் அறிந்தோம்.
آية رقم 25
(நபியே!) நிச்சயமாக உம் இறைவன்தான் இவர்களை (எல்லாம் மறுமையில்) ஒன்று திரட்டுவான். நிச்சயமாக அவன் மகா ஞானவான், நன்கறிந்தவன்.
آية رقم 26
திட்டவட்டமாக பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தோம்.
آية رقم 27
(மனிதனைப் படைப்பதற்கு) முன்பே ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்.
آية رقم 28
“நிச்சயமாக நான், பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்கப்போகிறேன்”என்று உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!
آية رقم 29
“நான் அவரை செம்மை செய்து, அவரி(ன் உடலி)ல் என் உயிரிலிருந்து ஊதினால் அவருக்கு (முன்) சிரம் பணிந்தவர்களாக விழுங்கள்”(என்று கட்டளையிட்டான்).
آية رقم 30
ﯶﯷﯸﯹ
ﯺ
(அவ்வாறே) வானவர்கள் எல்லோரும், அனைவரும் சிரம் பணிந்தார்கள்;
آية رقم 31
இப்லீஸைத் தவிர; (அவன்) சிரம் பணிந்தவர்களுடன் ஆகுவதற்கு மறுத்து விட்டான்.
آية رقم 32
“இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் நீ(யும் சிரம் பணிந்தவனாக) ஆகாதிருக்க உனக்கென்ன நேர்ந்தது?” என்று (அல்லாஹ்) கூறினான்.
آية رقم 33
“பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து நீ படைத்த ஒரு மனிதனுக்கு (நெருப்பிலிருந்து படைக்கப்பட்ட) நான் சிரம் பணிபவனாக இல்லை (அது என்னால் முடியாது)” என்று (இப்லீஸ்) கூறினான்.
آية رقم 34
ﭦﭧﭨﭩﭪ
ﭫ
“இதிலிருந்து வெளியேறு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்”
آية رقم 35
ﭬﭭﭮﭯﭰﭱ
ﭲ
இன்னும் “நிச்சயமாக உன் மீது சாபம் கூலி (கொடுக்கப்படும்) நாள் வரை உண்டாகுக!” என்று (அல்லாஹ்) கூறினான்.
آية رقم 36
ﭳﭴﭵﭶﭷﭸ
ﭹ
“என் இறைவா! (இறந்தவர்கள்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரை எனக்கு அவகாசமளி”என்று (இப்லீஸ்) கூறினான்.
آية رقم 37
ﭺﭻﭼﭽ
ﭾ
(அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நீ அவகாசமளிக்கப்பட்டவர்களில் உள்ளவன்,
آية رقم 38
ﭿﮀﮁﮂ
ﮃ
(நிச்சயமாக நீ தீர்ப்புக்காக) குறிப்பிடப்பட்ட நேரத்தின் நாள் (வருகின்ற) வரை."
آية رقم 39
“என் இறைவா! என்னை நீ வழிகெடுத்ததன் காரணமாக பூமியில் நிச்சயமாக (அசிங்கமான செயல்களை) அவர்களுக்கு அலங்கரிப்பேன்; இன்னும் நிச்சயமாக அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்”என்று (இப்லீஸ்) கூறினான்.
آية رقم 40
ﮏﮐﮑﮒ
ﮓ
அவர்களில் (மனத்தூய்மைப் பெற்ற) பரிசுத்தமான உன் அடியார்களைத் தவிர”(அவர்களை நான் வழிகெடுக்க முடியாது.)
آية رقم 41
ﮔﮕﮖﮗﮘ
ﮙ
“இது என் பக்கம் (சேர்ப்பிக்கும்) நேரான வழியாகும்”என்று (இறைவன்) கூறினான்.
آية رقم 42
நிச்சயமாக என் அடியார்கள், உனக்கு அவர்கள் மீது அதிகாரம் இல்லை. உன்னைப் பின்பற்றுகின்ற வழிகெட்டவர்களைத் தவிர. (அவர்களைத்தான் உன்னால் வழிகெடுக்க முடியும்.)
آية رقم 43
ﮦﮧﮨﮩ
ﮪ
நிச்சயமாக நரகம் அவர்கள் அனைவரின் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
آية رقم 44
அதற்கு ஏழு வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலுக்கும் அவர்களில் (தனியாக) பிரிக்கப்பட்ட (ஒதுக்கப்பட்ட) ஒரு பிரிவினர் உண்டு.
آية رقم 45
ﯕﯖﯗﯘﯙ
ﯚ
நிச்சயமாக, அல்லாஹ்வை அஞ்சியவர்கள் சொர்க்கங்களிலும் (அவற்றில் உள்ள) நீரருவிகளிலும் இருப்பார்கள்.
آية رقم 46
ﯛﯜﯝ
ﯞ
“நீங்கள் சலாம் (என்ற முகமன்) உடன் அச்சமற்றவர்களாக அதில் நுழையுங்கள்”(என்று கூறப்படும்).
آية رقم 47
அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். (அவர்கள் அங்கு) சகோதரர்களாக, ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக கட்டில்கள் மீது (சாய்ந்து) இருப்பார்கள்.
آية رقم 48
அவர்களுக்கு அதில் சிரமம் ஏற்படாது. அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களாக இல்லை.
آية رقم 49
(நபியே!) என் அடியார்களுக்கு அறிவிப்பீராக! “நிச்சயமாக நான்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
آية رقم 50
ﯻﯼﯽﯾﯿ
ﰀ
“இன்னும் நிச்சயமாக என் வேதனைதான் துன்புறுத்தக்கூடிய வேதனை!”
آية رقم 51
ﰁﰂﰃﰄ
ﰅ
(நபியே!) இப்றாஹீமுடைய விருந்தாளிகள் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக.
آية رقم 52
அவர்கள் அவரிடம் நுழைந்த சமயத்தை நினைவு கூருங்கள். “ஸலாம்” (ஈடேற்றம் உண்டாகுக!) என்று (முகமன்) கூறினர். அவர் ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களைப் பற்றி பயமுள்ளவர்கள்”என்று கூறினார்.
آية رقم 53
“பயப்படாதீர். நிச்சயமாக நாம் உமக்கு அறிஞரான ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்”என்று கூறினார்கள்.
آية رقم 54
“எனக்கு முதுமை ஏற்பட்டிருக்க எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதைக் கொண்டு நற்செய்தி கூறுகிறீர்கள்?” என்று கூறினார்.
آية رقم 55
நாங்கள் உமக்கு உண்மை(யான செய்தி)யைக் கொண்டு(தான்) நற்செய்தி கூறினோம். ஆகவே, அவநம்பிக்கையாளர்களில் ஆகிவிடாதீர்”என்று கூறினார்கள்.
آية رقم 56
“வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவனின் அருளிலிருந்து யார் அவநம்பிக்கை கொள்வார்?” என்று (இப்றாஹீம்) கூறினார்.
آية رقم 57
ﭽﭾﭿﮀﮁ
ﮂ
“(வானவத்) தூதர்களே! உங்கள் காரியமென்ன?” என்று கூறினார்.
آية رقم 58
ﮃﮄﮅﮆﮇﮈ
ﮉ
“குற்றம் புரிகின்ற மக்களின் பக்கம் நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டோம்”என்று கூறினார்கள்.
آية رقم 59
ﮊﮋﮌﮍﮎﮏ
ﮐ
“(எனினும்,) லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர. (மற்றவர்களை அழிப்போம்.) நிச்சயமாக நாங்கள் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பவர்கள்தான்.
آية رقم 60
ﮑﮒﮓﮔﮕﮖ
ﮗ
(எனினும்,) அவருடைய மனைவியைத் தவிர. நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன் தண்டனையில்) தங்கிவிடுபவர்களில் உள்ளவள்தான் என்று முடிவு செய்தோம்”(என்று இறைவன் கூறியதாகக் கூறினார்கள்).
آية رقم 61
ﮘﮙﮚﮛﮜ
ﮝ
(வானவத்) தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபோது,
آية رقم 62
ﮞﮟﮠﮡ
ﮢ
“நிச்சயமாக நீங்கள் அறியப்படாத கூட்டமாகும்!” என்று அவர் கூறினார்.
آية رقم 63
“மாறாக! (உம் மக்களாகிய) இவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்ததை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்”என்று கூறினர்.
آية رقم 64
ﮫﮬﮭﮮ
ﮯ
உம்மிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக நாம் உண்மையாளர்கள்தான்.
آية رقم 65
ஆகவே, (இன்றைய) இரவின் ஒரு பகுதியில் உம் குடும்பத்தினருடன் செல்வீராக; மேலும் அவர்களுக்குப் பின்னால் (அவர்களை) பின்பற்றுவீராக; உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்; இன்னும் நீங்கள் ஏவப்பட்ட இடத்திற்கு (இதே நிலையில்) செல்லுங்கள்.”
آية رقم 66
நிச்சயமாக இவர்களின் வேர், (இவர்கள் பொழுது) விடிந்தவர்களாக இருக்கும்போது துண்டிக்கப்படும் என்று அக்காரியத்தை அவருக்கு முடிவு செய்தோம்.
آية رقم 67
ﯪﯫﯬﯭ
ﯮ
அந்நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தவர்களாக வந்தார்கள்.
آية رقم 68
ﯯﯰﯱﯲﯳﯴ
ﯵ
“நிச்சயமாக இவர்கள் என் விருந்தினர். ஆகவே, என்னை அவமானப்படுத்தாதீர்கள்.”
آية رقم 69
ﯶﯷﯸﯹ
ﯺ
“அல்லாஹ்வை அஞ்சுங்கள்; என்னை இழிவு படுத்தாதீர்கள்”
آية رقم 70
ﯻﯼﯽﯾﯿ
ﰀ
“உலக மக்களை (விருந்தளிக்க அழைப்பதை) விட்டு நாம் உம்மைத் தடுக்கவில்லையா?” என்று கூறினர்.
آية رقم 71
ﭑﭒﭓﭔﭕﭖ
ﭗ
“(இதோ!) இவர்கள் என் பெண் மக்கள். நீங்கள் (நான் ஏவுவதை) செய்பவர்களாக இருந்தால் (இவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்)” என்று கூறினார்.
آية رقم 72
ﭘﭙﭚﭛﭜ
ﭝ
(நபியே!) உம் வாழ்வின் சத்தியம்! நிச்சயமாக இவர்கள்(-சிலைவணங்கிகள்) தங்கள் மயக்கத்தில் (வழிகேட்டில் கடுமையாக) தடுமாறுகின்றனர்.
آية رقم 73
ﭞﭟﭠ
ﭡ
ஆகவே, (அவர்கள் காலையில் சூரிய) வெளிச்சமடைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை இடிமுழக்கம் பிடித்தது.
آية رقم 74
அவர்கள் மீது களிமண்ணின் கல்லை (மழையாக)ப் பொழிந்தோம்; அதன் மேல் புறத்தை அதன் கீழ்புறமாக (தலைகீழாக) ஆக்கினோம்.
آية رقم 75
ﭫﭬﭭﭮﭯ
ﭰ
நிச்சயமாக இதில் நுண்ணறிவாளர்களுக்கு அத்தாட்சிகள் (பல) இருக்கின்றன.
آية رقم 76
ﭱﭲﭳ
ﭴ
நிச்சயமாக அது (அவர்கள் சென்று வருகின்ற) நிலையான, (தெளிவான) பாதையில்தான் (அழியாமல் இன்றும்) இருக்கிறது.
آية رقم 77
ﭵﭶﭷﭸﭹ
ﭺ
நிச்சயமாக அதில் நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
آية رقم 78
ﭻﭼﭽﭾﭿ
ﮀ
நிச்சயமாக (ஷுஐபுடைய மக்களாகிய) தோப்புடையவர்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தார்கள்.
آية رقم 79
ﮁﮂﮃﮄﮅ
ﮆ
ஆகவே, அவர்களை பழி வாங்கினோம். அவ்விரண்டு (ஊர்களு)ம் தெளிவான வழியில்தான் உள்ளன.
آية رقم 80
ﮇﮈﮉﮊﮋ
ﮌ
‘ஹிஜ்ர்’வாசிகள் தூதர்களைத் திட்டவட்டமாக பொய்ப்பித்தார்கள்.
آية رقم 81
ﮍﮎﮏﮐﮑ
ﮒ
அவர்களுக்கு நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம். அவற்றைப் புறக்கணித்தவர்களாக (அவர்கள்) இருந்தனர்.
آية رقم 82
ﮓﮔﮕﮖﮗﮘ
ﮙ
அச்சமற்றவர்களாக, மலைகளில் வீடுகளைக் குடைந்து (வாழ்ந்து) கொண்டிருந்தனர்.
آية رقم 83
ﮚﮛﮜ
ﮝ
(அவர்கள்) பொழுது விடிந்தவர்களாக இருக்க அவர்களை சப்தம் பிடித்தது.
آية رقم 84
ﮞﮟﮠﮡﮢﮣ
ﮤ
அவர்கள் (தங்களை பாதுகாக்க) செய்து கொண்டிருந்தவை (எதுவும்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை.
آية رقم 85
வானங்களையும் பூமியையும், அவை இரண்டிற்கு மத்திலுள்ளவற்றையும் உண்மையான நோக்கத்திற்கே தவிர நாம் படைக்கவில்லை. நிச்சயம் (குறிப்பிட்ட) மறுமை வரக்கூடியதே! ஆகவே, அழகிய புறக்கணிப்பாக (அவர்களை) புறக்கணிப்பீராக.
آية رقم 86
ﯗﯘﯙﯚﯛ
ﯜ
நிச்சயமாக உம் இறைவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன்.
آية رقم 87
(நபியே!) மீண்டும் மீண்டும் ஓதப்படும் வசனங்களில் ஏழு வசனங்களையும், மகத்துவமிக்க குர்ஆனையும் திட்டவட்டமாக உமக்குக் கொடுத்தோம்.
آية رقم 88
இவர்களில் சில வகையினர்களுக்கு (இவ்வுலகில்) நாம் எதைக் கொண்டு சுகமளித்தோமோ அதன் பக்கம் உம் இரு கண்களையும் கண்டிப்பாக நீட்டாதீர் (அவற்றை ஆசைப்படாதீர்); அவர்கள் மீது கவலைப்படாதீர். நம்பிக்கையாளர்களுக்கு உம் புஜத்தை தாழ்த்துவீராக! (மென்மையாக பணிவுடன் இருப்பீராக!).
آية رقم 89
ﯵﯶﯷﯸﯹ
ﯺ
“நிச்சயமாக நான்தான் தெளிவான எச்சரிப்பாளன்”என்று கூறுவீராக.
آية رقم 90
ﯻﯼﯽﯾ
ﯿ
(வேதத்தை) பிரித்தவர்கள் மீது நாம் (வேதனையை) இறக்கியது போன்றே... (இந்நிராகரிப்பாளர்கள் மீது வேதனையை இறக்கி வைப்போம்.)
آية رقم 91
ﭑﭒﭓﭔ
ﭕ
அவர்கள் குர்ஆனைப் பல வகைகளாக ஆக்கினார்கள்.
آية رقم 92
ﭖﭗﭘ
ﭙ
(ஆகவே) உம் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்,
آية رقم 93
ﭚﭛﭜ
ﭝ
அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி.
آية رقم 94
ﭞﭟﭠﭡﭢﭣ
ﭤ
ஆகவே, எதை நீர் ஏவப்படுகிறீரோ அதை தெளிவுடன் பகிரங்கப்படுத்துவீராக. மேலும், இணைவைப்பவர்களைப் புறக்கணிப்பீராக.
آية رقم 95
ﭥﭦﭧ
ﭨ
பரிகசிப்பவர்களிடமிருந்து நிச்சயமாக நாம் உம்மைப் பாதுகாப்போம்.
آية رقم 96
இவர்கள் அல்லாஹ்வுடன் வணங்கப்படும் மற்றொரு தெய்வத்தை ஆக்குகிறார்கள். (தங்கள் முடிவை) விரைவில் அறிவார்கள்.
آية رقم 97
(நபியே!) நிச்சயமாக நீர் (உம்மைப் பற்றி) அவர்கள் (தரக் குறைவாக) கூறுவதால் உம் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிறது என்பதை திட்டவட்டமாக அறிவோம்.
آية رقم 98
ﭻﭼﭽﭾﭿﮀ
ﮁ
ஆகவே, உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! (அவனுக்குச்) சிரம் பணிபவர்களில் ஆகிவிடுவீராக;
آية رقم 99
ﮂﮃﮄﮅﮆ
ﮇ
உங்களுக்கு ‘யகீன்’(நம்பிக்கை எனும் மரணம்) வரும் வரை உம் இறைவனை வணங்குவீராக!
تقدم القراءة