سورة المرسلات

الترجمة التاميلية - عمر شريف

ترجمة معاني سورة المرسلات باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف

الترجمة التاميلية - عمر شريف

آية رقم 1
எதைப் பற்றி (அவர்கள் தங்களுக்குள்) விசாரித்துக் கொள்கிறார்கள்?
آية رقم 2
அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!
آية رقم 3
(மேகங்களை பல திசைகளில்) பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
آية رقم 4
(உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில்) தெளிவாக பிரித்துவிடக் கூடியவற்றின் மீது (-இறைவசனங்கள் மீது) சத்தியமாக!
آية رقم 5
(நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக,
آية رقم 6
(அல்லாஹ்வின் புறத்தில் இருந்து) ஒரு காரணமாக அல்லது எச்சரிக்கையாக இருப்பதற்கு (வேதங்களை அவர்கள் இறக்குகிறார்கள்)!
آية رقم 7
நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது நிகழ்ந்தே தீரும்.
آية رقم 8
நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது,
آية رقم 9
வானம் பிளக்கப்படும் போது,
آية رقم 10
மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும் போது,
آية رقم 11
தூதர்கள் (மறுமையில்) ஒன்று சேர்க்கப்படும்போது,
آية رقم 12
எந்த நாளுக்காக அவர்கள் தாமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்!?
آية رقم 13
(ஆம், மறுமையின்) தீர்ப்பு நாளுக்காக (அவர்கள் தாமதிக்கப்பட்டுள்ளார்கள்).
آية رقم 14
தீர்ப்பு நாள் என்னவென்று உமக்குத் தெரியுமா?
آية رقم 15
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 16
(நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
آية رقم 17
பிறகு, (அவர்களைப்போன்று நிராகரித்த) பின்னோர்களை(யும் அழிவில்) அவர்களுக்கு பின்தொடர வைத்தோம்.
آية رقم 18
இவ்வாறுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வோம்.
آية رقم 19
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 20
பலவீனமான ஒரு நீரிலிருந்து நாம் உங்களை படைக்கவில்லையா?
آية رقم 21
உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம்,
آية رقم 22
குறிப்பிட்ட ஒரு தவணை வரை.
آية رقم 23
நாம் திட்ட மிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்.
آية رقم 24
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 25
பூமியை ஒன்று சேர்க்கக்கூடியதாக (-மக்கள் அனைவரையும் சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக) நாம் ஆக்கவில்லையா?
آية رقم 26
(பூமி தன் முதுகின் மேல்) உயிருள்ளவர்களையும் (தன் வயிற்றுக்குள்) இறந்தவர்களையும் (ஒன்று சேர்க்கக்கூடியதாக -அவர்கள் அனைவரையும் சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கி இருக்கின்றோம்.)
آية رقم 27
அதில் மிக பிரமாண்டமான மலைகளை நாம் ஆக்கினோம். உங்களுக்கு மதுரமான நீரை நாம் புகட்டினோம்.
آية رقم 28
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 29
நீங்கள் எதை பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்களோ அதன் பக்கம் (இன்று) செல்லுங்கள்!
آية رقم 30
மூன்று கிளைகளை உடைய (நெருப்பு) புகையின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்!
آية رقم 31
அது நிழல்தரக்கூடியது அல்ல, அது (நெருப்பின்) ஜுவாலையை தடுக்காது.
آية رقم 32
நிச்சயமாக அது (-நரகம்) மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்!
آية رقم 33
அவையோ கரு மஞ்சள் நிற ஒட்டகைகளைப் போல் இருக்கும்!
آية رقم 34
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 35
இது அவர்கள் பேசாத நாளாகும்.
آية رقم 36
அவர்களுக்கு அனுமதி தரப்படாது. (அனுமதி கொடுத்தால்தானே) அவர்கள் காரணம் கூறுவதற்கு.
آية رقم 37
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 38
இது தீர்ப்பு நாளாகும். உங்களையும் முன்னோரையும் (ஒரே மைதானத்தில்) நாம் ஒன்று சேர்த்துள்ளோம்.
آية رقم 39
உங்களிடம் (எங்களுக்கு எதிராக தீங்கு செய்வதற்கு) ஒரு சூழ்ச்சி இருந்தால், எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்.
آية رقم 40
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 41
நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் நிழல்களிலும் ஊற்றுகளிலும்,
آية رقم 42
இன்னும் அவர்கள் விரும்புகின்ற பழங்களிலும் (-அவற்றைப் புசிப்பதிலும்) இருப்பார்கள்.
آية رقم 43
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு (நல்ல அமல்களுக்கு) பகரமாக இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்!
آية رقم 44
நிச்சயமாக நாம் நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
آية رقم 45
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 46
(இவ்வுலகில்) கொஞ்ச காலம் உண்ணுங்கள்! இன்புறுங்கள்! நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்!
آية رقم 47
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 48
தொழுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால் அவர்கள் தொழ மாட்டார்கள்.
آية رقم 49
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 50
இதற்கு பின்னர், வேறு எந்த குர்ஆனை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்!
تقدم القراءة