ترجمة معاني سورة المرسلات باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف
آية رقم 1
ﮑﮒ
ﮓ
எதைப் பற்றி (அவர்கள் தங்களுக்குள்) விசாரித்துக் கொள்கிறார்கள்?
آية رقم 2
ﮔﮕ
ﮖ
அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!
آية رقم 3
ﮗﮘ
ﮙ
(மேகங்களை பல திசைகளில்) பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
آية رقم 4
ﮚﮛ
ﮜ
(உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில்) தெளிவாக பிரித்துவிடக் கூடியவற்றின் மீது (-இறைவசனங்கள் மீது) சத்தியமாக!
آية رقم 5
ﮝﮞ
ﮟ
(நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக,
آية رقم 6
ﮠﮡﮢ
ﮣ
(அல்லாஹ்வின் புறத்தில் இருந்து) ஒரு காரணமாக அல்லது எச்சரிக்கையாக இருப்பதற்கு (வேதங்களை அவர்கள் இறக்குகிறார்கள்)!
آية رقم 7
ﮤﮥﮦ
ﮧ
நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது நிகழ்ந்தே தீரும்.
آية رقم 8
ﮨﮩﮪ
ﮫ
நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது,
آية رقم 9
ﮬﮭﮮ
ﮯ
வானம் பிளக்கப்படும் போது,
آية رقم 10
ﮰﮱﯓ
ﯔ
மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும் போது,
آية رقم 11
ﯕﯖﯗ
ﯘ
தூதர்கள் (மறுமையில்) ஒன்று சேர்க்கப்படும்போது,
آية رقم 12
ﯙﯚﯛ
ﯜ
எந்த நாளுக்காக அவர்கள் தாமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்!?
آية رقم 13
ﯝﯞ
ﯟ
(ஆம், மறுமையின்) தீர்ப்பு நாளுக்காக (அவர்கள் தாமதிக்கப்பட்டுள்ளார்கள்).
آية رقم 14
ﯠﯡﯢﯣﯤ
ﯥ
தீர்ப்பு நாள் என்னவென்று உமக்குத் தெரியுமா?
آية رقم 15
ﯦﯧﯨ
ﯩ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 16
ﯪﯫﯬ
ﯭ
(நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
آية رقم 17
ﯮﯯﯰ
ﯱ
பிறகு, (அவர்களைப்போன்று நிராகரித்த) பின்னோர்களை(யும் அழிவில்) அவர்களுக்கு பின்தொடர வைத்தோம்.
آية رقم 18
ﯲﯳﯴ
ﯵ
இவ்வாறுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வோம்.
آية رقم 19
ﯶﯷﯸ
ﯹ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 20
ﭑﭒﭓﭔﭕ
ﭖ
பலவீனமான ஒரு நீரிலிருந்து நாம் உங்களை படைக்கவில்லையா?
آية رقم 21
ﭗﭘﭙﭚ
ﭛ
உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம்,
آية رقم 22
ﭜﭝﭞ
ﭟ
குறிப்பிட்ட ஒரு தவணை வரை.
آية رقم 23
ﭠﭡﭢ
ﭣ
நாம் திட்ட மிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்.
آية رقم 24
ﭤﭥﭦ
ﭧ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 25
ﭨﭩﭪﭫ
ﭬ
பூமியை ஒன்று சேர்க்கக்கூடியதாக (-மக்கள் அனைவரையும் சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக) நாம் ஆக்கவில்லையா?
آية رقم 26
ﭭﭮ
ﭯ
(பூமி தன் முதுகின் மேல்) உயிருள்ளவர்களையும் (தன் வயிற்றுக்குள்) இறந்தவர்களையும் (ஒன்று சேர்க்கக்கூடியதாக -அவர்கள் அனைவரையும் சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கி இருக்கின்றோம்.)
آية رقم 27
அதில் மிக பிரமாண்டமான மலைகளை நாம் ஆக்கினோம். உங்களுக்கு மதுரமான நீரை நாம் புகட்டினோம்.
آية رقم 28
ﭸﭹﭺ
ﭻ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 29
ﭼﭽﭾﭿﮀﮁ
ﮂ
நீங்கள் எதை பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்களோ அதன் பக்கம் (இன்று) செல்லுங்கள்!
آية رقم 30
ﮃﮄﮅﮆﮇﮈ
ﮉ
மூன்று கிளைகளை உடைய (நெருப்பு) புகையின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்!
آية رقم 31
ﮊﮋﮌﮍﮎﮏ
ﮐ
அது நிழல்தரக்கூடியது அல்ல, அது (நெருப்பின்) ஜுவாலையை தடுக்காது.
آية رقم 32
ﮑﮒﮓﮔ
ﮕ
நிச்சயமாக அது (-நரகம்) மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்!
آية رقم 33
ﮖﮗﮘ
ﮙ
அவையோ கரு மஞ்சள் நிற ஒட்டகைகளைப் போல் இருக்கும்!
آية رقم 34
ﮚﮛﮜ
ﮝ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 35
ﮞﮟﮠﮡ
ﮢ
இது அவர்கள் பேசாத நாளாகும்.
آية رقم 36
ﮣﮤﮥﮦ
ﮧ
அவர்களுக்கு அனுமதி தரப்படாது. (அனுமதி கொடுத்தால்தானே) அவர்கள் காரணம் கூறுவதற்கு.
آية رقم 37
ﮨﮩﮪ
ﮫ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 38
ﮬﮭﮮﮯﮰﮱ
ﯓ
இது தீர்ப்பு நாளாகும். உங்களையும் முன்னோரையும் (ஒரே மைதானத்தில்) நாம் ஒன்று சேர்த்துள்ளோம்.
آية رقم 39
ﯔﯕﯖﯗﯘ
ﯙ
உங்களிடம் (எங்களுக்கு எதிராக தீங்கு செய்வதற்கு) ஒரு சூழ்ச்சி இருந்தால், எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்.
آية رقم 40
ﯚﯛﯜ
ﯝ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 41
ﯞﯟﯠﯡﯢ
ﯣ
நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் நிழல்களிலும் ஊற்றுகளிலும்,
آية رقم 42
ﯤﯥﯦ
ﯧ
இன்னும் அவர்கள் விரும்புகின்ற பழங்களிலும் (-அவற்றைப் புசிப்பதிலும்) இருப்பார்கள்.
آية رقم 43
ﯨﯩﯪﯫﯬﯭ
ﯮ
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு (நல்ல அமல்களுக்கு) பகரமாக இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்!
آية رقم 44
ﯯﯰﯱﯲ
ﯳ
நிச்சயமாக நாம் நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
آية رقم 45
ﯴﯵﯶ
ﯷ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 46
ﯸﯹﯺﯻﯼ
ﯽ
(இவ்வுலகில்) கொஞ்ச காலம் உண்ணுங்கள்! இன்புறுங்கள்! நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்!
آية رقم 47
ﯾﯿﰀ
ﰁ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 48
ﰂﰃﰄﰅﰆﰇ
ﰈ
தொழுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால் அவர்கள் தொழ மாட்டார்கள்.
آية رقم 49
ﰉﰊﰋ
ﰌ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
آية رقم 50
ﰍﰎﰏﰐ
ﰑ
இதற்கு பின்னர், வேறு எந்த குர்ஆனை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்!
تقدم القراءة