ترجمة معاني سورة البلد باللغة التاميلية من كتاب الترجمة التاميلية
عبد الحميد الباقوي
آية رقم 1
ﭽﭾﭿﮀ
ﮁ
1. (நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
آية رقم 2
ﮂﮃﮄﮅ
ﮆ
2. அதிலும் நீர் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில்.
آية رقم 3
ﮇﮈﮉ
ﮊ
3. (மனிதர்களின்) தந்தை மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகள் மீதும் சத்தியமாக!
آية رقم 4
ﮋﮌﮍﮎﮏ
ﮐ
4. மெய்யாகவே நாம் மனிதனை சிரமத்தில் மூழ்கியவனாகவே படைத்திருக்கிறோம்.
آية رقم 5
ﮑﮒﮓﮔﮕﮖ
ﮗ
5. (அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா?
آية رقم 6
ﮘﮙﮚﮛ
ﮜ
6. ‘‘ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்'' என்று, அவன் (கர்வம் கொண்டு பெருமையாகக்) கூறுகிறான்.
آية رقم 7
ﮝﮞﮟﮠﮡ
ﮢ
7. அவ்வளவு பொருளை ஒருவருமே பார்த்திருக்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ?
آية رقم 8
ﮣﮤﮥﮦ
ﮧ
8. (பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ளவில்லை.)
آية رقم 9
ﮨﮩ
ﮪ
9. (பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா?)
آية رقم 10
ﮫﮬ
ﮭ
10. (நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்;
آية رقم 11
ﮮﮯﮰ
ﮱ
11. எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை.
آية رقم 12
ﯓﯔﯕﯖ
ﯗ
12. (நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா?
آية رقم 13
ﯘﯙ
ﯚ
13. அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.
آية رقم 14
ﯛﯜﯝﯞﯟﯠ
ﯡ
14-16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
آية رقم 15
ﯢﯣﯤ
ﯥ
14-16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
آية رقم 16
ﯦﯧﯨﯩ
ﯪ
14-16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
آية رقم 17
17. பிறகு, எவர்கள் நம்பிக்கை கொண்டும் ஒருவருக்கொருவர் பொறுமையைக் கடைபிடிக்குமாறு நல்லுபதேசம் செய்துகொண்டும், கருணை காட்டவேண்டும் என்று ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்துகொண்டும் இருக்கிறார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார்.
آية رقم 18
ﯵﯶﯷ
ﯸ
18. இவர்கள்தான் வலது பக்கத்தில் இருப்பவர்கள்.
آية رقم 19
ﭑﭒﭓﭔﭕﭖ
ﭗ
19. எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் இடப்பக்கத்தில் இருப்பவர்கள்.
آية رقم 20
ﭘﭙﭚ
ﭛ
20. அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும்.
تقدم القراءة