الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா الإنشقاق இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭣﭤﭥ
ﭦ
1. (உலகம் அழியும் சமயத்தில்) வானம் பிளந்து விடும்போது,
Verse 2
ﭧﭨﭩ
ﭪ
2. அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
Verse 3
ﭫﭬﭭ
ﭮ
3. மேலும், பூமி விரிக்கப்படும்போது,
Verse 4
ﭯﭰﭱﭲ
ﭳ
4. மேலும், அது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எறிந்து வெறுமனே ஆகிவிடும்போது,
Verse 5
ﭴﭵﭶ
ﭷ
5. மேலும், அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்து விடும் (போது மனிதன் தன் செயலுக்குரிய கூலியைப் பெறுவான்). (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
Verse 6
6. மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரை (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) சிரமத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறாய். (பின்னர், மறுமையில்) அவனை நீ சந்திக்கிறாய்.
Verse 7
ﮁﮂﮃﮄﮅ
ﮆ
7. ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப்படுகிறதோ,
Verse 8
ﮇﮈﮉﮊ
ﮋ
8. அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.
Verse 9
ﮌﮍﮎﮏ
ﮐ
9. அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார்.
Verse 10
ﮑﮒﮓﮔﮕﮖ
ﮗ
10. எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ,
Verse 11
ﮘﮙﮚ
ﮛ
11. அவன், (தனக்குக்) கேடுதான் என்று (அப்படியே) சப்தமிடுவான்,
Verse 12
ﮜﮝ
ﮞ
12. நரகத்தில் நுழைவான்.
Verse 13
ﮟﮠﮡﮢﮣ
ﮤ
13. ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தான்.
Verse 14
ﮥﮦﮧﮨﮩ
ﮪ
14. மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான்.
Verse 15
15. அது சரியன்று! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாகவே இருந்தான்.
Verse 16
ﯔﯕﯖ
ﯗ
16. (மாலை நேர) செம்மேகத்தின் மீது சத்தியமாக!
Verse 17
ﯘﯙﯚ
ﯛ
17. இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியமாக!)
Verse 18
ﯜﯝﯞ
ﯟ
18 பூரணச் சந்திரன் மீது சத்தியமாக!
Verse 19
ﯠﯡﯢﯣ
ﯤ
19. (ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கிறது.
Verse 20
ﯥﯦﯧﯨ
ﯩ
20. ஆகவே, (இதை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இதை நம்பிக்கை கொள்வதில்லை.
Verse 21
21. அவர்களுக்கு இந்த குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை.
Verse 22
ﯲﯳﯴﯵ
ﯶ
22. அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்த குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர்.
Verse 23
ﯷﯸﯹﯺ
ﯻ
23. எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான்.
Verse 24
ﯼﯽﯾ
ﯿ
24. ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
Verse 25
25. எனினும், இவர்களில் எவர்கள் (தங்கள் பாவத்திலிருந்து திருந்தி) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு.
تقدم القراءة