الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா الغاشية இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭽﭾﭿﮀ
ﮁ
1. (நபியே! அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உமக்குக் கிடைத்ததா?
Verse 2
ﮂﮃﮄ
ﮅ
2. அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும்.
Verse 3
ﮆﮇ
ﮈ
3. அவை (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை.
Verse 4
ﮉﮊﮋ
ﮌ
4. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவை செல்லும்.
Verse 5
ﮍﮎﮏﮐ
ﮑ
5. (அவை) கொதிக்கின்ற ஓர் ஊற்றிலிருந்து நீர் புகட்டப்படும்.
Verse 6
ﮒﮓﮔﮕﮖﮗ
ﮘ
6. அதில் அவர்களுக்கு(க் கருவேல) முட்களைத் தவிர, வேறொன்றும் உணவாகக் கிடைக்காது.
Verse 7
ﮙﮚﮛﮜﮝﮞ
ﮟ
7. (அது அவர்களுடைய உடலைக்) கொழுக்கவும் வைக்காது; (அவர்களுடைய) பசியையும் தீர்த்து வைக்காது.
Verse 8
ﮠﮡﮢ
ﮣ
8. எனினும், அந்நாளில் வேறு சில முகங்களோ, மிக்க செழிப்பாக இருக்கும்.
Verse 9
ﮤﮥ
ﮦ
9. (இம்மையில்) தாங்கள் செய்த (நல்ல) காரியங்களைப் பற்றித் திருப்தியடையும்.
Verse 10
ﮧﮨﮩ
ﮪ
10. (அவை) மேலான சொர்க்கத்தில் இருக்கும்.
Verse 11
ﮫﮬﮭﮮ
ﮯ
11. அதில் வீண் வார்த்தையை அவை செவியுறாது.
Verse 12
ﮰﮱﯓ
ﯔ
12. அதில் (இவர்கள் அருந்துவதற்கு) தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்ற (தெளிவான) ஒரு சுனையுண்டு.
Verse 13
ﯕﯖﯗ
ﯘ
13. அதில் (இவர்கள் அமருவதற்கு) உயர்ந்த இருக்கைகளுண்டு.
Verse 14
ﯙﯚ
ﯛ
14. (பல வகை இன்பமான பானங்கள் நிறைந்த) கெண்டிகள் (இவர்கள் முன்) வைக்கப்பட்டிருக்கும்.
Verse 15
ﯜﯝ
ﯞ
15. (இவர்கள் சாய்ந்து கொள்வதற்காகத்) திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.
Verse 16
ﯟﯠ
ﯡ
16. உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும். (இத்தகைய சுகபோகத்தில் நல்லடியார்கள் இருப்பார்கள்.)
Verse 17
ﯢﯣﯤﯥﯦﯧ
ﯨ
17. (நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது?
Verse 18
ﯩﯪﯫﯬ
ﯭ
18. (அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
Verse 19
ﯮﯯﯰﯱ
ﯲ
19. (அவர்கள் கண்முன் தோன்றும்) மலைகளையும் அவர்கள் (கவனிக்க வேண்டாமா?) அவை எவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன?
Verse 20
ﯳﯴﯵﯶ
ﯷ
20. (அவர்கள் வசிக்கும்) பூமியையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது?
Verse 21
ﯸﯹﯺﯻ
ﯼ
21. (ஆகவே, நபியே!) இவற்றை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவற்றைப் படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீர் கூறி) நல்லுபதேசம் செய்வீராக! (இவற்றைக்கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான்,
Verse 22
ﯽﯾﯿ
ﰀ
22. (அவ்வாறே நடக்கும்படி) அவர்களை நீர் நிர்ப்பந்திக்கக்கூடியவர் அல்ல.
Verse 23
ﭑﭒﭓﭔ
ﭕ
23 எனினும், எவர்கள் புறக்கணித்து நிராகரிக்கிறார்களோ,
Verse 24
ﭖﭗﭘﭙ
ﭚ
24. அவர்களை அல்லாஹ் பெரும் வேதனை செய்வான்.
Verse 25
ﭛﭜﭝ
ﭞ
25. நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம்தான் வர வேண்டும்.
Verse 26
ﭟﭠﭡﭢ
ﭣ
26. நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்குக் கேட்பதும் நம் மீதுதான் கடமையாகும்.
تقدم القراءة