الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா الفجر இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭤ
ﭥ
1, 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!
Verse 2
ﭦﭧ
ﭨ
1, 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!
Verse 3
ﭩﭪ
ﭫ
3. ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக!
Verse 4
ﭬﭭﭮ
ﭯ
4. நிகழ்கின்ற இரவின் மீது சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்).
Verse 5
ﭰﭱﭲﭳﭴﭵ
ﭶ
5. இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது.
Verse 6
ﭷﭸﭹﭺﭻﭼ
ﭽ
6, 7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
Verse 7
ﭾﭿﮀ
ﮁ
6, 7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
Verse 8
ﮂﮃﮄﮅﮆﮇ
ﮈ
8. அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.
Verse 9
ﮉﮊﮋﮌﮍ
ﮎ
9. இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.
Verse 10
ﮏﮐﮑ
ﮒ
10. இன்னும், (இராணுவங்களையுடைய) ஆணிக்கார ஃபிர்அவ்னை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?)
Verse 11
ﮓﮔﮕﮖ
ﮗ
11. இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.
Verse 12
ﮘﮙﮚ
ﮛ
12. (பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.
Verse 13
ﮜﮝﮞﮟﮠ
ﮡ
13. ஆதலால், உங்கள் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக்கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.
Verse 14
ﮢﮣﮤ
ﮥ
14. நிச்சயமாக உமது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கிறான்.
Verse 15
15. ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்.
Verse 16
16. ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான்.
Verse 17
ﯞﯟﯠﯡﯢﯣ
ﯤ
17. (விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை.
Verse 18
ﯥﯦﯧﯨﯩ
ﯪ
18. ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை.
Verse 19
ﯫﯬﯭﯮ
ﯯ
19. பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள்.
Verse 20
ﯰﯱﯲﯳ
ﯴ
20. மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள்.
Verse 21
21. அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,
Verse 22
ﯽﯾﯿﰀﰁ
ﰂ
22. உமது இறைவனும் வருவான். வானவர்களும் அணிஅணியாக வருவார்கள்.
Verse 23
23. அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அப்போது (உதயமாகின்ற) அறிவால் அவனுக்கு என்ன பயன்?
Verse 24
ﭜﭝﭞﭟ
ﭠ
24. ‘‘என் வாழ்க்கையில் நான் (ஒரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டுமே!'' என்று புலம்புவான்.
Verse 25
ﭡﭢﭣﭤﭥ
ﭦ
25. அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.)
Verse 26
ﭧﭨﭩﭪ
ﭫ
26. (பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.)
Verse 27
ﭬﭭﭮ
ﭯ
27. (எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே!
Verse 28
ﭰﭱﭲﭳﭴ
ﭵ
28. நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்றும்)
Verse 29
ﭶﭷﭸ
ﭹ
29. ‘‘நீ என் நல்லடியார்களில் சேர்ந்து,
Verse 30
ﭺﭻ
ﭼ
30. என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்).
تقدم القراءة