الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா الليل இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﮡﮢﮣ
ﮤ
1. (அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
Verse 2
ﮥﮦﮧ
ﮨ
2. பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக!
Verse 3
ﮩﮪﮫﮬ
ﮭ
3. ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
Verse 4
ﮮﮯﮰ
ﮱ
4. (மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன.
Verse 5
ﯓﯔﯕﯖ
ﯗ
5. ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து,
Verse 6
ﯘﯙ
ﯚ
6. (இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கிறாரோ,
Verse 7
ﯛﯜ
ﯝ
7. அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் எளிதாக்கித் தருவோம்.
Verse 8
ﯞﯟﯠﯡ
ﯢ
8. எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது,
Verse 9
ﯣﯤ
ﯥ
9. (இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கிறானோ,
Verse 10
ﭑﭒ
ﭓ
10. அவனுக்குக் (கஷ்டத்திற்குரிய) நரகப் பாதையைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்.
Verse 11
ﭔﭕﭖﭗﭘﭙ
ﭚ
11. அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (ஒரு) பயனுமளிக்காது.
Verse 12
ﭛﭜﭝ
ﭞ
12. நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பது நம்மீதுதான் கடமையாகும்.
Verse 13
ﭟﭠﭡﭢ
ﭣ
13. நிச்சயமாக இம்மையும், மறுமையும் நமக்கே சொந்தமானவை!
Verse 14
ﭤﭥﭦ
ﭧ
14. (மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
Verse 15
ﭨﭩﭪﭫ
ﭬ
15. மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான்.
Verse 16
ﭭﭮﭯ
ﭰ
16. அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான்.
Verse 17
ﭱﭲ
ﭳ
17. இறையச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.
Verse 18
ﭴﭵﭶﭷ
ﭸ
18. அவர் (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன் பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்.
Verse 19
ﭹﭺﭻﭼﭽﭾ
ﭿ
19. தான் பதில் நன்மை செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் தன் மீது இருக்காது.
Verse 20
ﮀﮁﮂﮃﮄ
ﮅ
20. இருப்பினும், மிக்க மேலான தன் இறைவனின் திருமுகத்தை விரும்பியே தவிர (வேறு எதற்காகவும் தானம் செய்ய மாட்டார்).
Verse 21
ﮆﮇ
ﮈ
21. (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார்.
تقدم القراءة