الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா الليل இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﮡﮢﮣ
ﮤ
(முற்)பகலின் மீது சத்தியமாக!
Verse 2
ﮥﮦﮧ
ﮨ
பகலின் மீது சத்தியமாக! (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும் போது,
Verse 3
ﮩﮪﮫﮬ
ﮭ
ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
Verse 4
ﮮﮯﮰ
ﮱ
(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி பலதரப்பட்டதுதான்.
Verse 5
ﯓﯔﯕﯖ
ﯗ
ஆக, யார் தர்மம் புரிந்து, இன்னும் அல்லாஹ்வை அஞ்சினாரோ,
Verse 6
ﯘﯙ
ﯚ
(இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை உண்மைப்படுத்தினாரோ,
Verse 7
ﯛﯜ
ﯝ
சொர்க்கப் பாதையை அவருக்கு இலகுவாக்குவோம்.
Verse 8
ﯞﯟﯠﯡ
ﯢ
ஆக, யார் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வின் அருளை விட்டுத் தன்னை) தேவையற்றவனாகக் கருதினானோ,
Verse 9
ﯣﯤ
ﯥ
இன்னும் (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை பொய்ப்பித்தானோ,
Verse 10
ﭑﭒ
ﭓ
அவனுக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம்.
Verse 11
ﭔﭕﭖﭗﭘﭙ
ﭚ
அவன் (நரகில்) விழும்போது, அவனுடைய செல்வம் அவனுக்குப் பலனளிக்காது.
Verse 12
ﭛﭜﭝ
ﭞ
நிச்சயமாக நேர்வழி காட்டுவதுதான் நம்மீது (கடமை).
Verse 13
ﭟﭠﭡﭢ
ﭣ
நிச்சயமாக மறுமையும் இம்மையும் நமக்கே (உரியது)!
Verse 14
ﭤﭥﭦ
ﭧ
ஆகவே, கொழுந்துவிட்டெரிகின்ற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்.
Verse 15
ﭨﭩﭪﭫ
ﭬ
அதில் பற்றி எரிய மாட்டான் பெரும் தீயவனைத் தவிர.
Verse 16
ﭭﭮﭯ
ﭰ
எவன் (நம் மார்க்கத்தை) பொய்ப்பித்தான்; இன்னும் புறக்கணித்தான்.
Verse 17
ﭱﭲ
ﭳ
அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர்தான் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்.
Verse 18
ﭴﭵﭶﭷ
ﭸ
(அவர்) மனத்தூய்மையை நாடியவராக தன் செல்வத்தைத் (தர்மம்) கொடுக்கிறார்.
Verse 19
ﭹﭺﭻﭼﭽﭾ
ﭿ
ஒருவரின் கூலி கொடுக்கப்படும்படியான உபகாரம் ஏதும் அவரிடம் இல்லை.
Verse 20
ﮀﮁﮂﮃﮄ
ﮅ
மிக உயர்ந்தவனான தன் இறைவனின் முகத்தைத் தேடுவதைத் தவிர (வேறு நோக்கம் அவருக்கில்லை).
Verse 21
ﮆﮇ
ﮈ
(அல்லாஹ்வின் வெகுமதியால்) திட்டமாக (அவர்) திருப்தியடைவார்.
تقدم القراءة