الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா الصافات இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭑﭒ
ﭓ
ஸாத், அறிவுரைகள் நிறைந்த அல்குர்ஆன் மீது சத்தியமாக!
Verse 2
ﭔﭕ
ﭖ
கடுமையாக விரட்டுகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக!
Verse 3
ﭗﭘ
ﭙ
வேதத்தை ஓதுபவர்கள் மீது சத்தியமாக!
Verse 4
ﭚﭛﭜ
ﭝ
நிச்சயமாக உங்கள் கடவுள் ஒருவன்தான்.
Verse 5
(அவன்தான்) வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் (-அதிபதி) ஆவான். இன்னும் (அவன்) சூரியன் உதிக்கும் இடங்களையும் (அது மறையும் இடங்களையும்) நிர்வகிப்பவன் ஆவான்.
Verse 6
ﭦﭧﭨﭩﭪﭫ
ﭬ
நிச்சயமாக நாம் கீழுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தால் அலங்கரித்துள்ளோம்.
Verse 7
ﭭﭮﭯﭰﭱ
ﭲ
(இறைவனுக்கு) அடங்காத எல்லா ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் (நட்சத்திரங்களால் வானத்தை அலங்கரித்தோம்).
Verse 8
மிக உயர்ந்த கூட்டத்தினரின் (-வானவர்களின்) பேச்சை அவர்களால் செவியுற முடியாது. (வானத்தை விட்டு தடுக்கப்படுவதற்காக) எல்லா பக்கங்களில் இருந்தும் அவர்கள் (-அந்த ஷைத்தான்கள் வால் நட்சத்திரங்களால்) எறியப்படுவார்கள்,
Verse 9
ﭽﭾﭿﮀﮁ
ﮂ
(வனத்தை விட்டும்) தடுக்கப்படுவதற்காக (அந்த ஷைத்தான்கள் வால் நட்சத்திரங்களால் எறியப்படுவார்கள்). இன்னும், அவர்களுக்கு நிரந்தரமான வேதனை உண்டு.
Verse 10
எனினும், (வானவர்களின் பேச்சை) யார் திருட்டுத்தனமாக திருடுகின்றாரோ (கள்ளத்தனமாக ஒட்டுக்கேட்க முயற்சிக்கின்றாரோ) எரிக்கின்ற நெருப்புக் கங்கு அவரை பின்தொடரும்.
Verse 11
அவர்கள் (-மறுமையை மறுப்பவர்கள்) படைப்பால் பலமிக்கவர்களா அல்லது எவர்களை நாம் படைத்தோமோ (அவர்கள் பலமிக்கவர்களா? அதாவது வானம், பூமி, மலைகள், வானவர்கள் போன்ற படைப்புகளா)? என்று அவர் களிடம் விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை (-மனிதர்களை) பிசுபிசுப்பான (ஒட்டிக்கொள்கின்ற நல்ல) மண்ணிலிருந்து படைத்தோம்.
Verse 12
ﮙﮚﮛ
ﮜ
மாறாக, (நபியே!) நீர் (இந்த குர்ஆன் கொடுக்கப்பட்டபோது) ஆச்சரியப்பட்டீர். அவர்கள் (இதை) பரிகாசிக்கின்றனர்.
Verse 13
ﮝﮞﮟﮠ
ﮡ
அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் அறிவுரை பெறமாட்டார்கள்.
Verse 14
ﮢﮣﮤﮥ
ﮦ
அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) பரிகாசம் செய்கிறார்கள்.
Verse 15
ﮧﮨﮩﮪﮫﮬ
ﮭ
தெளிவான சூனியமே தவிர இது வேறில்லை என்று கூறுகின்றனர்.
Verse 16
நாங்கள் இறந்து, எலும்புகளாகவும், (எங்கள் சதை) மண்ணாகவும் மாறிவிட்டால் நிச்சயமாக நாங்கள் (மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படுவோமா?
Verse 17
ﯗﯘ
ﯙ
இன்னும், எங்கள் முந்திய முன்னோர்களுமா (எழுப்பப்படுவார்கள்)?
Verse 18
ﯚﯛﯜﯝ
ﯞ
ஆம் (நீங்கள் அனைவரும் எழுப்பப்படுவீர்கள்). இன்னும், நீங்கள் மிகவும் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள் என்று கூறுவீராக!
Verse 19
அதுவெல்லாம் (-மறுமை நிகழ்வதெல்லாம்) ஒரே ஒரு பலமான சப்தம்தான். அப்போது அவர்கள் (மறுமையின் காட்சிகளை கண்கூடாகப்) பார்ப்பார்கள்.
Verse 20
ﯧﯨﯩﯪﯫ
ﯬ
எங்கள் நாசமே! என்று அவர்கள் கூறுவார்கள். (அப்போது அவர்களுக்குக் கூறப்படும் ஆம்!) இதுதான் கூலி கொடுக்கப்படும் நாள்.
Verse 21
இதுதான் தீர்ப்பு நாள் ஆகும். இதை நீங்கள் பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்கள்.
Verse 22
அநியாயம் செய்தவர்களையும் அவர்களின் இனத்தவர்களையும் (-நிராகரிப்பில் அவர்களைப் பின்பற்றியவர்களையும்) இன்னும் (அல்லாஹ்வை அன்றி) அவர்கள் வணங்கி வந்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள்,
Verse 23
அல்லாஹ்வை அன்றி (அவர்கள் வணங்கிய பொய் தெய்வங்களையும் ஒன்று திரட்டி,) நரகத்துடைய பாதையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.
Verse 24
ﰆﰇﰈﰉ
ﰊ
அவர்களை நிறுத்துங்கள்! நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
Verse 25
ﭑﭒﭓﭔ
ﭕ
உங்களுக்கு என்ன நேர்ந்தது நீங்கள் உங்களுக்குள் உதவிக் கொள்ளவில்லை?
Verse 26
ﭖﭗﭘﭙ
ﭚ
மாறாக, அவர்கள் இன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்.
Verse 27
ﭛﭜﭝﭞﭟ
ﭠ
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (தங்கள் இறுதி தங்குமிடத்தைப் பற்றி) விசாரித்துக் கொள்வார்கள்.
Verse 28
ﭡﭢﭣﭤﭥﭦ
ﭧ
அவர்கள் (-வழிகெட்டவர்கள் வழிகெடுத்தவர்களை நோக்கி) கூறுவார்கள்: நன்மையை விட்டுத் தடுக்க நீங்கள் எங்களிடம் வருபவர்களாக இருந்தீர்கள்.
Verse 29
ﭨﭩﭪﭫﭬ
ﭭ
அவர்கள் (-வழிகெடுத்தவர்கள்) கூறுவார்கள்: மாறாக நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
Verse 30
(உங்களை வழிகெடுக்க) எங்களுக்கு உங்கள் மீது எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை. மாறாக, நீங்கள் எல்லை மீறுகின்ற மக்களாக இருந்தீர்கள்.
Verse 31
ஆகவே, நம் மீது நமது இறைவனுடைய (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விட்டது. நிச்சயமாக நாம் (தண்டனையை) சுவைப்பவர்கள்தான்.
Verse 32
ﮂﮃﮄﮅ
ﮆ
ஆக, நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நிச்சயமாக நாங்கள் வழி கெட்டவர்களாகவே இருந்தோம்.
Verse 33
ﮇﮈﮉﮊﮋ
ﮌ
நிச்சயமாக அவர்கள் (வழிகெட்டவர்களும் வழிகெடுத்தவர்களும்) அந்நாளில் வேதனையில் (ஒன்றாக) கூட்டாகுவார்கள்.
Verse 34
ﮍﮎﮏﮐ
ﮑ
நிச்சயமாக நாம் இப்படித்தான் குற்றவாளிகளுடன் நடந்து கொள்வோம்.
Verse 35
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிச்சயமாக அவர்கள் பெருமை அடி(த்து புறக்கணி)ப்பவர்களாக இருந்தனர்.
Verse 36
ﮝﮞﮟﮠﮡﮢ
ﮣ
பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை நிச்சயமாக நாங்கள் விட்டுவிடுவோமா? என்று அவர்கள் கூறுகின்றனர்.
Verse 37
ﮤﮥﮦﮧﮨ
ﮩ
மாறாக, அவர் (-அந்தத் தூதர்) சத்தியத்தைக் கொண்டு வந்தார். இன்னும் தூதர்களை உண்மைப்படுத்தினார்.
Verse 38
ﮪﮫﮬﮭ
ﮮ
நிச்சயமாக நீங்கள் வலிதரும் வேதனையை சுவைப்பீர்கள்.
Verse 39
ﮯﮰﮱﯓﯔﯕ
ﯖ
நீங்கள் செய்து வந்ததற்கே அன்றி நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
Verse 40
ﯗﯘﯙﯚ
ﯛ
அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் தண்டனையை விட்டும் பாதுகாக்கப்படுவார்கள்.)
Verse 41
ﯜﯝﯞﯟ
ﯠ
அறியப்பட்ட உணவு அவர்களுக்கு உண்டு.
Verse 42
ﯡﯢﯣ
ﯤ
(அதாவது) பழங்கள் (அவர்களுக்கு உண்டு). இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்,
Verse 43
ﯥﯦﯧ
ﯨ
இன்பமிகு சொர்க்கங்களில். கட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக (இருப்பார்கள்).
Verse 44
ﯩﯪﯫ
ﯬ
கட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக (இருப்பார்கள்).
Verse 45
ﯭﯮﯯﯰﯱ
ﯲ
மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன் அவர்களை சுற்றிவரப்படும்.
Verse 46
ﯳﯴﯵ
ﯶ
(அவை) வெள்ளைநிறமாக இருக்கும். குடிப்பவர்களுக்கு (அந்த பானம்) மிக இன்பமாக இருக்கும்.
Verse 47
அதில் (அறிவைப் போக்கக்கூடிய) போதையும் இருக்காது (தலைவலி, வயிற்று வலி இருக்காது.) அவர்கள் அதனால் மயக்கமுறவுமாட்டார்கள்.
Verse 48
ﯿﰀﰁﰂ
ﰃ
அவர்களிடம் பார்வைகளை தாழ்த்திய கண்ணழகிகள் இருப்பார்கள்.
Verse 49
ﰄﰅﰆ
ﰇ
அவர்கள் பாதுகாக்கப்பட்ட (-மறைக்கப்பட்ட தீகோழியின்) முட்டையைப் போன்று (-அதன் நிறத்தில்) இருப்பார்கள்.
Verse 50
ﰈﰉﰊﰋﰌ
ﰍ
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (நரகவாசிகளைப் பற்றி) விசாரிப்பார்கள்.
Verse 51
நிச்சயமாக எனக்கு ஒரு நண்பன் இருந்தான் என்று அவர்களில் கூறக்கூடிய ஒருவர் கூறுவார்.
Verse 52
ﭑﭒﭓﭔ
ﭕ
நிச்சயமாக நீ (தூதர்களை) உண்மைப்படுத்துபவர்களில் இருக்கின்றாயா என்று (உலகில் வாழும் போது என்னிடம்) கூறுவான்.
Verse 53
“நாம் இறந்துவிட்டால் (பின்னர்) எலும்புகளாகவும் மண்ணாகவும் மாறி விட்டால், நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்கு) கூலி கொடுக்கப்படுவோமா?” (என்று அவன் கூறுவான்)
Verse 54
ﭞﭟﭠﭡ
ﭢ
அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: நீங்கள் (நரகத்தில் உள்ளவர்களை) எட்டிப்பார்ப்பீர்களா? (அது முடியுமா?) என்று கூறுவார்.
Verse 55
ﭣﭤﭥﭦﭧ
ﭨ
அவர் (-அந்த நம்பிக்கையாளர் நரகத்தில்) எட்டிப்பார்ப்பார். அவர் அவனை நரகத்தின் நடுவில் பார்ப்பார்.
Verse 56
ﭩﭪﭫﭬﭭ
ﭮ
அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நீ என்னை நாசமாக்குவதற்கு நெருக்கமாக இருந்தாய்.
Verse 57
ﭯﭰﭱﭲﭳﭴ
ﭵ
என் இறைவனின் அருள் இல்லாதிருந்தால் நானும் (நரகத்தில் தண்டனைக்காக) ஆஜர்படுத்தப்படுபவர்களில் ஆகி இருப்பேன்.
Verse 58
ﭶﭷﭸ
ﭹ
(எங்கள் முதல் மரணத்தைத் தவிர) நாங்கள் மரணிப்பவர்களாக இல்லை தானே? (-மரணத்திற்குப் பிறகு எங்களுக்கு வாழ்க்கை இல்லை.)
Verse 59
ﭺﭻﭼﭽﭾﭿ
ﮀ
எங்கள் முதல் மரணத்தைத் தவிர (நாங்கள் மரணிப்பவர்களாக இல்லை தானே?) இன்னும் நாங்கள் வேதனை செய்யப்படுபவர்களாக இல்லை.
Verse 60
ﮁﮂﮃﮄﮅ
ﮆ
நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Verse 61
ﮇﮈﮉﮊ
ﮋ
அமல் செய்பவர்கள் இது போன்றதற்காக (-இதுபோன்ற நன்மைகளை பெறுவதற்காக) அமல் செய்யட்டும்.
Verse 62
ﮌﮍﮎﮏﮐﮑ
ﮒ
அது (-மேற்கூறப்பட்ட சொர்க்க இன்பங்கள் இறைவனின்) விருந்தோம்பலால் மிகச் சிறந்ததா அல்லது ஸக்கூம் என்ற கள்ளி மரமா?
Verse 63
ﮓﮔﮕﮖ
ﮗ
நிச்சயமாக நாம் இணைவைப்பவர்களுக்கு அதை ஒரு சோதனையாக (தண்டனையாக) ஆக்கினோம்.
Verse 64
ﮘﮙﮚﮛﮜﮝ
ﮞ
நிச்சயமாக அது நரகத்தின் அடியில் முளைக்கின்ற ஒரு மரமாகும்.
Verse 65
ﮟﮠﮡﮢ
ﮣ
அதன் கனிகள் ஷைத்தான்களின் (-பாம்புகளின்) தலைகளைப் போல் (மிக விகாரமாக) இருக்கும்.
Verse 66
ﮤﮥﮦﮧﮨﮩ
ﮪ
நிச்சயமாக அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவார்கள். இன்னும் அதிலிருந்து (தங்கள்) வயிறுகளை நிரப்புவார்கள்.
Verse 67
பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு அதற்கு மேல் கொதி நீரில் இருந்து கலக்கப்படும். (அவர்கள் உண்ணுகின்ற கள்ளிமர பழத்துடன் கடுமையான உஷ்ணமுள்ள நீரும் கலந்து கொடுக்கப்படும்.)
Verse 68
ﯔﯕﯖﯗﯘ
ﯙ
(கள்ளிப்பழத்தை உண்டு கொதி நீரைக் குடித்த) பிறகு நிச்சயமாக அவர்களின் மீளுமிடம் நரக நெருப்பின் பக்கம்தான் இருக்கும்.
Verse 69
ﯚﯛﯜﯝ
ﯞ
நிச்சயமாக அவர்கள் (-இந்த இணைவைப்பவர்கள்) தங்கள் மூதாதைகளை வழிகெட்டவர்களாக பெற்றார்கள்.
Verse 70
ﯟﯠﯡﯢ
ﯣ
அவர்களின் (-மூதாதைகளின்) அடிச்சுவடுகளில் (அவற்றை கண்மூடித்தனமாக பின்பற்றுவதற்கு) இவர்கள் விரைகின்றார்கள்.
Verse 71
ﯤﯥﯦﯧﯨ
ﯩ
இவர்களுக்கு முன்னர் முன்னோரில் அதிகமானவர்கள் திட்டவட்டமாக வழி கெட்டுள்ளனர்.
Verse 72
ﯪﯫﯬﯭ
ﯮ
திட்டவட்டமாக அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர்களை நாம் அனுப்பினோம்.
Verse 73
ﯯﯰﯱﯲﯳ
ﯴ
ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே) நீர் பார்ப்பீராக!
Verse 74
ﯵﯶﯷﯸ
ﯹ
எனினும், அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்கள் (இம்மையிலும் மறுமையிலும் இறை தண்டனையில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.)
Verse 75
ﯺﯻﯼﯽﯾ
ﯿ
திட்டவட்டமாக நூஹ் நம்மை அழைத்தார். பதில் தருபவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்.
Verse 76
ﰀﰁﰂﰃﰄ
ﰅ
மிகப் பெரிய துக்கத்தில் இருந்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் பாதுகாத்தோம்.
Verse 77
ﭑﭒﭓﭔ
ﭕ
அவரது சந்ததிகளைத்தான் (உலகில்) மீதமானவர்களாக நாம் ஆக்கினோம்.
Verse 78
ﭖﭗﭘﭙ
ﭚ
பின்வருபவர்களில் அவரைப் பற்றி நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.
Verse 79
ﭛﭜﭝﭞﭟ
ﭠ
உலகத்தார்களில் (யாரும் அவரை பழித்துப் பேசாதவாறு) நூஹுக்கு ஸலாம் - பாதுகாப்பு உண்டாகட்டும்.
Verse 80
ﭡﭢﭣﭤ
ﭥ
நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
Verse 81
ﭦﭧﭨﭩ
ﭪ
நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.
Verse 82
ﭫﭬﭭ
ﭮ
பிறகு மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.
Verse 83
ﭯﭰﭱﭲﭳ
ﭴ
நிச்சயமாக அவரது கொள்கையை சேர்ந்தவர்களில் உள்ளவர்தான் இப்ராஹீம்.
Verse 84
ﭵﭶﭷﭸﭹ
ﭺ
அவர் தனது இறைவனிடம் ஈடேற்றம் பெற்ற உள்ளத்துடன் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
Verse 85
ﭻﭼﭽﭾﭿﮀ
ﮁ
தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் எதை நீங்கள் வணங்குகிறீர்கள் என்று அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
Verse 86
ﮂﮃﮄﮅﮆ
ﮇ
அல்லாஹ்வை அன்றி பல பொய்யான தெய்வங்களை (உங்கள் தேவைகளுக்கும் வழிபாடுகளுக்கும்) நீங்கள் நாடுகிறீர்களா?
Verse 87
ﮈﮉﮊﮋ
ﮌ
அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன? (அவன் ஒருவனை மட்டும் நீங்கள் வணங்க மறுப்பது ஏன்?)
Verse 88
ﮍﮎﮏﮐ
ﮑ
அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை பார்த்தார்.
Verse 89
ﮒﮓﮔ
ﮕ
அவர் கூறினார் நிச்சயமாக நான் ஒரு நோயாளி ஆவேன்.
Verse 90
ﮖﮗﮘ
ﮙ
ஆகவே, அவர்கள் அவரை விட்டு பிரிந்து திரும்பிச் சென்றனர்.
Verse 91
ﮚﮛﮜﮝﮞﮟ
ﮠ
ஆக, அவர்களின் தெய்வங்கள் பக்கம் அவர் (மறைவாக) சென்று (அந்த தெய்வங்களிடம்) கூறினார்: “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?”
Verse 92
ﮡﮢﮣﮤ
ﮥ
"உங்களுக்கு என்ன ஏற்பட்டது நீங்கள் ஏன் பேசுவதில்லை?”
Verse 93
ﮦﮧﮨﮩ
ﮪ
வலக்கரத்தால் அவற்றை அடி(த்து உடை)ப்பதற்காக அவற்றின் மீது பாய்ந்தார்.
Verse 94
ﮫﮬﮭ
ﮮ
ஆகவே, அவர்கள் விரைந்தவர்களாக அவரை நோக்கி வந்தனர்.
Verse 95
ﮯﮰﮱﯓ
ﯔ
அவர் கூறினார்: நீங்கள் செதுக்குகின்றவற்றை நீங்கள் வணங்குகிறீர்களா?
Verse 96
ﯕﯖﯗﯘ
ﯙ
"அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்வதையும் படைத்தான்."
Verse 97
அவர்கள் கூறினர்: அவருக்கு ஒரு கட்டிடத்தை கட்டுங்கள். (அதில் விறகுகளை போட்டு நெருப்பு எறியுங்கள்!) அந்த நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்!
Verse 98
ﯢﯣﯤﯥﯦ
ﯧ
ஆக, அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சியை நாடினர். நாம் அவர்களைத்தான் மிகத் தாழ்ந்தவர்களாக ஆக்கினோம்.
Verse 99
ﯨﯩﯪﯫﯬﯭ
ﯮ
அவர் கூறினார்: நிச்சயமாக நான் என் இறைவனின் பக்கம் செல்கிறேன். அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.
Verse 100
ﯯﯰﯱﯲﯳ
ﯴ
என் இறைவா எனக்கு நல்லவர்களில் ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையைத் தா!
Verse 101
ﯵﯶﯷ
ﯸ
ஆகவே, மிக சகிப்பாளரான ஒரு குழந்தையைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.
Verse 102
அது (அந்த குழந்தை) அவருடன் உழைக்கின்ற பருவத்தை அடைந்த போது அவர் கூறினார்: “என் மகனே! நிச்சயமாக நான் உன்னை பலியிடுவதாக கனவில் பார்க்கிறேன். ஆகவே, நீ என்ன கருதுகிறாய் என்று நீ யோசி(த்து சொல்)!” அவர் (மகனார்) கூறினார்: என் தந்தையே! உமக்கு ஏவப்படுவதை நீர் செய்வீராக! இன்ஷா அல்லாஹ் (-அல்லாஹ் நாடினால்) பொறுமையாளர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.
Verse 103
ﭑﭒﭓﭔ
ﭕ
அப்போது, அவர்கள் இருவரும் (இறைவனின் கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தனர். அவர் அவரை (அவருடைய) கன்னத்தின் மீது கீழே சாய்த்தார்.
Verse 104
ﭖﭗﭘ
ﭙ
இப்ராஹீமே! என்று நாம் அவரை அழைத்தோம்.
Verse 105
திட்டமாக நீர் கனவை உண்மைப்படுத்தினீர். நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
Verse 106
ﭣﭤﭥﭦﭧ
ﭨ
நிச்சயமாக இதுதான் தெளிவான சோதனையாகும்.
Verse 107
ﭩﭪﭫ
ﭬ
மகத்தான ஒரு பலிப்பிராணியைக் கொண்டு அவரை விடுதலை செய்தோம்.
Verse 108
ﭭﭮﭯﭰ
ﭱ
பின்னோரில் அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்.
Verse 109
ﭲﭳﭴ
ﭵ
இப்ராஹீமுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகட்டும்.
Verse 110
ﭶﭷﭸ
ﭹ
இப்படித்தான் நல்லவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
Verse 111
ﭺﭻﭼﭽ
ﭾ
நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.
Verse 112
ﭿﮀﮁﮂﮃ
ﮄ
நல்லவர்களில் ஒருவராகவும் நபியாகவும் இருக்கப்போகின்ற இஸ்ஹாக்கைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.
Verse 113
அவருக்கும் இஸ்ஹாக்கிற்கும் அருள் வளம் புரிந்தோம். அவ்விருவரின் சந்ததியில் நல்லவரும் தனக்கு தெளிவாக தீங்கிழைத்தவரும் இருக்கின்றனர்.
Verse 114
ﮑﮒﮓﮔﮕ
ﮖ
திட்டவட்டமாக மூசாவிற்கும் ஹாரூனுக்கும் அருள்புரிந்தோம்.
Verse 115
ﮗﮘﮙﮚﮛ
ﮜ
அவ்விருவரையும் அவ்விருவரின் மக்களையும் பெரிய துக்கத்தில் இருந்து பாதுகாத்தோம்.
Verse 116
ﮝﮞﮟﮠ
ﮡ
அவர்களுக்கு நாம் உதவினோம். ஆகவே, அவர்கள்தான் வெற்றியாளர்களாக ஆனார்கள்.
Verse 117
ﮢﮣﮤ
ﮥ
அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை கொடுத்தோம்.
Verse 118
ﮦﮧﮨ
ﮩ
அவ்விருவரையும் நேரான பாதையில் நேர்வழி நடத்தினோம்.
Verse 119
ﮪﮫﮬﮭ
ﮮ
பின்னோரில் அவ்விருவருக்கும் நற்பெயரை ஏற்படுத்தினோம்.
Verse 120
ﮯﮰﮱﯓ
ﯔ
மூசாவிற்கும் ஹாரூனுக்கும் ஈடேற்றம் உண்டாகட்டும்.
Verse 121
ﯕﯖﯗﯘ
ﯙ
நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
Verse 122
ﯚﯛﯜﯝ
ﯞ
நிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்கள் ஆவர்.
Verse 123
ﯟﯠﯡﯢ
ﯣ
இன்னும் நிச்சயமாக இல்யாஸ் (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.
Verse 124
ﯤﯥﯦﯧﯨ
ﯩ
அவர் தனது மக்களுக்கு நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சிக்கொள்ள மாட்டீர்களா? என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
Verse 125
ﯪﯫﯬﯭﯮ
ﯯ
பஅல் சிலையை நீங்கள் வணங்குகிறீர்களா? படைப்பாள(ன் என்று அழைக்கப்படுபவ)ர்களில் மிக அழகியவனை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா?
Verse 126
ﯰﯱﯲﯳﯴ
ﯵ
உங்கள் இறைவனான, இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவனுமான அல்லாஹ்வை (வணங்குவதை விட்டுவிடுகிறீர்களா)?
Verse 127
ﭑﭒﭓ
ﭔ
அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நரகத்தில்) ஆஜர்படுத்தப்படுவார்கள்.
Verse 128
ﭕﭖﭗﭘ
ﭙ
எனினும், அல்லாஹ்வின் பரிசுத்தமான (இணைவைக்காத) அடியார்கள் (சொர்க்கத்தில் இருப்பார்கள்).
Verse 129
ﭚﭛﭜﭝ
ﭞ
பின்னோரில் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தினோம்.
Verse 130
ﭟﭠﭡﭢ
ﭣ
இல்யாசுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகட்டும்.
Verse 131
ﭤﭥﭦﭧ
ﭨ
நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இப்படித்தான் கூலி கொடுப்போம்.
Verse 132
ﭩﭪﭫﭬ
ﭭ
நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.
Verse 133
ﭮﭯﭰﭱ
ﭲ
நிச்சயமாக லூத், (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.
Verse 134
ﭳﭴﭵﭶ
ﭷ
அவரையும் அவரது குடும்பத்தார் அனைவரையும் நாம் பாதுகாத்த சமயத்தை நினைவு கூர்வீராக!
Verse 135
ﭸﭹﭺﭻ
ﭼ
(தண்டனையில்) தங்கி விடுபவர்களில் ஒரு மூதாட்டியைத் தவிர (மற்றவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்டனர்).
Verse 136
ﭽﭾﭿ
ﮀ
ிறகு மற்றவர்களை நாம் அழித்தோம்.
Verse 137
ﮁﮂﮃﮄ
ﮅ
நிச்சயமாக நீங்கள் காலையில் அவர்களை கடந்து செல்கிறீர்கள்.
Verse 138
ﮆﮇﮈﮉ
ﮊ
இன்னும், இரவிலும் (அவர்களை கடந்து செல்கிறீர்கள்). நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?
Verse 139
ﮋﮌﮍﮎ
ﮏ
நிச்சயமாக யூனுஸ், (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.
Verse 140
ﮐﮑﮒﮓﮔ
ﮕ
அவர் (பொருள்களால்) நிரம்பிய கப்பலை நோக்கி ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக!
Verse 141
ﮖﮗﮘﮙ
ﮚ
அவர் குலுக்கிப் போட்டார். குலுக்கலில் பெயர்வந்தவர்களில் அவர் ஆகிவிட்டார்.
Verse 142
ﮛﮜﮝﮞ
ﮟ
அவரை திமிங்கிலம் விழுங்கியது. அவர் பழிப்புக்குரியவர் (தவறு செய்தவர்) ஆவார்.
Verse 143
ﮠﮡﮢﮣﮤ
ﮥ
நிச்சயமாக அவர் அல்லாஹ்வை துதிப்பவர்களில் (-தொழுபவர்களில்) இருந்திருக்கவில்லை என்றால்,
Verse 144
ﮦﮧﮨﮩﮪﮫ
ﮬ
அதனுடைய வயிற்றில் (மக்கள் மறுமையில்) எழுப்பப்படுகின்ற நாள் வரை தங்கி இருந்திருப்பார்.
Verse 145
ﮭﮮﮯﮰﮱ
ﯓ
(அருகிலிருந்த) பெருவெளியில் அவரை எறிந்தோம். அவர் நோயுற்றவராக இருந்தார்.
Verse 146
ﯔﯕﯖﯗﯘ
ﯙ
அவருக்கு அருகில் ஒரு சுரைக்காய் செடியை முளைக்க வைத்தோம்.
Verse 147
ﯚﯛﯜﯝﯞﯟ
ﯠ
ஒரு இலட்சம் அல்லது அதை விட அதிகமானவர்களுக்கு (தூதராக) அவரை அனுப்பினோம்.
Verse 148
ﯡﯢﯣﯤ
ﯥ
ஆக, அவர்கள் நம்பிக்கை கொண்டனர். ஆகவே, நாம் அவர்களுக்கு ஒரு காலம் வரை சுகமளித்தோம்.
Verse 149
ﯦﯧﯨﯩﯪ
ﯫ
ஆகவே, (நபியே! நீர்) அவர்களிடம் (-இந்த மக்காவாசிகளிடம்) கேட்பீராக! உமது இறைவனுக்கு பெண் பிள்ளைகளும், அவர்களுக்கு ஆண் பிள்ளைகளுமா?
Verse 150
ﯬﯭﯮﯯﯰﯱ
ﯲ
வானவர்களை பெண்களாகவா நாம் படைத்தோம்? அவர்கள் (நாம் படைக்கும்போது) பார்த்துக் கொண்டு இருந்தார்களா?
Verse 151
ﯳﯴﯵﯶﯷ
ﯸ
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தங்களது பெரும் பொய்களில் ஒன்றாக (பின்வருமாறு) கூறுகின்றனர்:
Verse 152
ﯹﯺﯻﯼ
ﯽ
“அல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான்” (என்று) நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் ஆவர்.
Verse 153
ﯾﯿﰀﰁ
ﰂ
ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளை அவன் தேர்தெடுத்துக் கொண்டானா?
Verse 154
ﭑﭒﭓﭔ
ﭕ
உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இவ்வாறு) எப்படி தீர்ப்பளிக்கிறீர்கள்?
Verse 155
ﭖﭗ
ﭘ
நீங்கள் நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?
Verse 156
ﭙﭚﭛﭜ
ﭝ
உங்களிடம் தெளிவான ஆதாரம் (ஏதும்) இருக்கிறதா?
Verse 157
ﭞﭟﭠﭡﭢ
ﭣ
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் வேதத்தை கொண்டு வாருங்கள்.
Verse 158
இன்னும், அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் ஓர் உறவை அவர்கள் ஏற்படுத்தினர். நிச்சயமாக தாங்கள் (நரகத்தில்) ஆஜர்படுத்தப்படுவோம் என்று திட்டவட்டமாக ஜின்கள் அறிந்து கொண்டனர்.
Verse 159
ﭰﭱﭲﭳ
ﭴ
அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
Verse 160
ﭵﭶﭷﭸ
ﭹ
அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் நரகத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.)
Verse 161
ﭺﭻﭼ
ﭽ
நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குகின்றவையும்,
Verse 162
ﭾﭿﮀﮁ
ﮂ
நீங்கள் அ(ந்த சிலை வணக்கத்)தைக் கொண்டு வழி கெடுப்பவர்களாக இல்லை,
Verse 163
ﮃﮄﮅﮆﮇ
ﮈ
நரகத்தில் எரிந்து பொசுங்குகின்றவரைத் தவிர. (அவரைத்தான் நீங்கள் வழிகெடுக்க முடியும்.)
Verse 164
ﮉﮊﮋﮌﮍﮎ
ﮏ
(வானவர்கள் கூறுவார்கள்:) "எங்களில் (யாரும்) இல்லை அவருக்கு ஒரு குறிப்பிட்ட தகுதி இருந்தே தவிர.
Verse 165
ﮐﮑﮒ
ﮓ
இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் அணிவகுப்பவர்கள்.
Verse 166
ﮔﮕﮖ
ﮗ
இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் துதித்து தொழுபவர்கள்."
Verse 167
ﮘﮙﮚ
ﮛ
இந்த மக்கா நகர வாசிகள்) நிச்சயமாக (இவ்வாறு) கூறுகின்றவர்களாக இருந்தனர்:
Verse 168
ﮜﮝﮞﮟﮠﮡ
ﮢ
நிச்சயமாக எங்களிடம் முன்னோரிடம் இருந்த வேதம் இருந்திருந்தால்,
Verse 169
ﮣﮤﮥﮦ
ﮧ
நாங்களும் அல்லாஹ்வை மட்டும் வணங்குகின்ற பரிசுத்தமான அடியார்களாக ஆகியிருப்போம்.”
Verse 170
ﮨﮩﮪﮫﮬ
ﮭ
ஆக, (அது வந்த பின்னர் இப்போது) அதை அவர்கள் நிராகரித்து விட்டனர். (தங்கள் முடிவை) அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
Verse 171
ﮮﮯﮰﮱﯓ
ﯔ
திட்டவட்டமாக நமது வாக்கு நமது இறைத்தூதர்களான அடியார்களுக்கு முந்திவிட்டது.
Verse 172
ﯕﯖﯗ
ﯘ
நிச்சயமாக அவர்கள்தான் உதவி செய்யப்படுவார்கள்.
Verse 173
ﯙﯚﯛﯜ
ﯝ
இன்னும், நிச்சயமாக நமது இராணுவம், அவர்கள்தான் வெற்றி பெறுபவர்கள்.
Verse 174
ﯞﯟﯠﯡ
ﯢ
ஆகவே, (நபியே) அவர்களை விட்டு சிறிது காலம் வரை நீர் விலகி இருப்பீராக!
Verse 175
ﯣﯤﯥ
ﯦ
இன்னும், நீர் அவர்களைப் பார்ப்பீராக! (அவர்களும் தங்களுக்கு இறங்கப் போகின்ற வேதனையை) விரைவில் பார்ப்பார்கள்.
Verse 176
ﯧﯨ
ﯩ
அவர்கள் நமது வேதனையை அவசரமாக வேண்டுகின்றனரா?
Verse 177
ﯪﯫﯬﯭﯮﯯ
ﯰ
ஆக, அது அவர்களின் முற்றத்தில் (அதிகாலையில்) இறங்கிவிட்டால் எச்சரிக்கப்பட்டவர்களின் (அந்த அதி)காலை மிக கெட்டதாக இருக்கும்.
Verse 178
ﯱﯲﯳﯴ
ﯵ
இன்னும், சிறிது காலம் வரை அவர்களை விட்டு விலகி இருப்பீராக!
Verse 179
ﯶﯷﯸ
ﯹ
இன்னும் (அவர்களைப்) பார்ப்பீராக! அவர்களும் (தங்களுக்கு இறங்கப் போகின்ற வேதனையை) விரைவில் பார்ப்பார்கள்.
Verse 180
ﯺﯻﯼﯽﯾﯿ
ﰀ
கண்ணியத்தின் அதிபதியான உமது இறைவன் அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மிக பரிசுத்தமானவன்.
Verse 181
ﰁﰂﰃ
ﰄ
இறைத் தூதர்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!
Verse 182
ﰅﰆﰇﰈ
ﰉ
அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்விற்கு எல்லாப் புகழும் உண்டாகுக!
تقدم القراءة