الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா البروج இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭛﭜﭝ
ﭞ
வானத்தின் மீது சத்தியமாக! "தாரிக்'கின் மீது (-இரவில் தோன்றி பகலில் மறையும் நட்சத்திரத்தின் மீது) சத்தியமாக!
Verse 2
ﭟﭠ
ﭡ
வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாள் மீது சத்தியமாக!
Verse 3
ﭢﭣ
ﭤ
சாட்சியாளர் (-வெள்ளிக்கிழமை) மீது சத்தியமாக! சாட்சியாக்கப்பட்ட (-அரஃபா நாள்) மீது சத்தியமாக!
Verse 4
ﭥﭦﭧ
ﭨ
. அகழ்க்காரர்கள் அழிக்கப்பட்டார்கள். விறகுகளுடைய நெருப்புடையவர்கள் (அழிக்கப்பட்டார்கள்).
Verse 5
ﭩﭪﭫ
ﭬ
. அகழ்க்காரர்கள் அழிக்கப்பட்டார்கள். விறகுகளுடைய நெருப்புடையவர்கள் (அழிக்கப்பட்டார்கள்).
Verse 6
ﭭﭮﭯﭰ
ﭱ
அதனருகில் அவர்கள் உட்கார்ந்திருந்தபோது,
Verse 7
ﭲﭳﭴﭵﭶﭷ
ﭸ
அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு எதை செய்வார்களோ (அதற்காக) ஆஜராகி இருந்தார்கள்.
Verse 8
மிகைத்தவனாகிய, புகழாளனாகிய, அல்லாஹ்வை (முஃமின்கள்) நம்பிக்கை கொண்டதற்காகவே தவிர அவர்களை (அந்த அகழ்க்காரர்கள்) தண்டிக்கவில்லை.
Verse 9
வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் சாட்சியாளன்.
Verse 10
நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் துன்புறுத்தி, பிறகு (அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி, வருந்தி, தங்கள் நிராகரிப்பை விட்டு) திருந்தவில்லையோ, அவர்களுக்கு ‘ஜஹன்னம்' என்ற நரகத்தின் வேதனை உண்டு. இன்னும், சுட்டெரிக்கக்கூடிய வேதனையும் அவர்களுக்கு உண்டு.
Verse 11
நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்களுக்கு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழிருந்து நதிகள் ஓடும், அதுதான் பெரும் வெற்றி.
Verse 12
ﮮﮯﮰﮱ
ﯓ
நிச்சயமாக உம் இறைவனின் பிடி கடுமையானதுதான்.
Verse 13
ﯔﯕﯖﯗ
ﯘ
நிச்சயமாக அவன்தான் (படைப்பை புதிதாக) உற்பத்தி செய்கிறான். இன்னும் (அவற்றை அழித்து பின்னர் அவற்றை) மீட்கிறான்.
Verse 14
ﯙﯚﯛ
ﯜ
அவன்தான் மகா மன்னிப்பாளன்; மகா நேசன்.
Verse 15
ﯝﯞﯟ
ﯠ
(அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் மதிப்பிற்குரியவன்.
Verse 16
ﯡﯢﯣ
ﯤ
(அவன்) தான் நாடுவதைச் செய்து முடிப்பவன்.
Verse 17
ﯥﯦﯧﯨ
ﯩ
. (நபியே!) ஃபிர்அவ்ன், இன்னும் ஸமூது (உடைய) ராணுவங்களின் செய்தி உமக்கு வந்ததா?
Verse 18
ﯪﯫ
ﯬ
. (நபியே!) ஃபிர்அவ்ன், இன்னும் ஸமூது (உடைய) ராணுவங்களின் செய்தி உமக்கு வந்ததா?
Verse 19
ﯭﯮﯯﯰﯱ
ﯲ
மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்தக் குர்ஆனைப்) பொய்ப்பிப்பதில்தான் (தீவிரமாக) இருக்கின்றனர்.
Verse 20
ﯳﯴﯵﯶ
ﯷ
அல்லாஹ், அவர்களுக்குப் பின்னாலிருந்து சூழ்ந்திருக்கின்றான்.
Verse 21
ﯸﯹﯺﯻ
ﯼ
மாறாக, இது பெரும் மதிப்பிற்குரிய குர்ஆனாகும்.
Verse 22
ﯽﯾﯿ
ﰀ
(அது) பாதுகாக்கப்பட்ட பலகையில் (பத்திரப்படுத்தப்பட்டுள்ளது).
تقدم القراءة