الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா التكوير இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭙﭚﭛ
ﭜ
(யுக முடிவில்) வானம் பிளந்துவிடும் போது,
Verse 2
ﭝﭞﭟ
ﭠ
இன்னும் நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,
Verse 3
ﭡﭢﭣ
ﭤ
இன்னும் மலைகள் அகற்றப்படும்போது,
Verse 4
ﭥﭦﭧ
ﭨ
இன்னும் நிறைமாத ஒட்டகங்கள் கவனிப்பற்று விடப்படும்போது,
Verse 5
ﭩﭪﭫ
ﭬ
இன்னும் காட்டு மிருகங்கள் (ஊர்களில்) ஒன்று சேர்க்கப்படும்போது,
Verse 6
ﭭﭮﭯ
ﭰ
இன்னும் கடல்கள் தீ மூட்டப்படும்போது (இவ்வுலகம் முடிவுறும்).
Verse 7
ﭱﭲﭳ
ﭴ
இன்னும் உயிர்கள் (உடலுடன்) இணைக்கப்படும்போது,
Verse 8
ﭵﭶﭷ
ﭸ
இன்னும் (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசாரிக்கப்படும்போது,
Verse 9
ﭹﭺﭻ
ﭼ
எந்தக் குற்றத்திற்காக கொல்லப்பட்டாள்? (என்று).
Verse 10
ﭽﭾﭿ
ﮀ
இன்னும் (செயல்கள் எழுதப்பட்ட) ஏடுகள் விரிக்கப்படும்போது,
Verse 11
ﮁﮂﮃ
ﮄ
இன்னும் வானம் அகற்றப்படும் போது,
Verse 12
ﮅﮆﮇ
ﮈ
இன்னும் நரகம் கடுமையாக எரிக்கப்படும் போது,
Verse 13
ﮉﮊﮋ
ﮌ
இன்னும் சொர்க்கம் சமீபமாக்கப்படும் போது,
Verse 14
ﮍﮎﮏﮐ
ﮑ
ஓர் ஆன்மா தான் கொண்டு வந்ததை அறியும்.
Verse 15
ﮒﮓﮔ
ﮕ
மறைந்து கொள்கின்றவற்றின் மீது சத்தியம் செய்கிறேன்.
Verse 16
ﮖﮗ
ﮘ
வேகமாகச் செல்கின்றவை, வெளிப்படுகின்றவை (மீது சத்தியம் செய்கிறேன்).
Verse 17
ﮙﮚﮛ
ﮜ
இரவின் மீது சத்தியமாக! அது பின்செல்லும்போது,
Verse 18
ﮝﮞﮟ
ﮠ
காலைப்பொழுதின் மீது சத்தியமாக அது தெளிவாகி விடும்போது.
Verse 19
ﮡﮢﮣﮤ
ﮥ
நிச்சயமாக இது கண்ணியத்திற்குரியவரான தூதர் (ஜிப்ரயீல்) உடைய கூற்றாகும். (இந்தக் குர்ஆன் அவர் மூலம் இறக்கப்பட்ட வேதமாகும்.)
Verse 20
ﮦﮧﮨﮩﮪﮫ
ﮬ
(அவர்) பலமுடையவர், அர்ஷுடையவனிடம் பதவியாளர்,
Verse 21
ﮭﮮﮯ
ﮰ
அங்கு (அவர் வானவர்களின்) தலைவர், (இன்னும், அவர் அல்லாஹ்விடம்) நம்பிக்கைக்குரியவர்.
Verse 22
ﮱﯓﯔ
ﯕ
உங்கள் தோழர் (-நபி முஹம்மது) பைத்தியக்காரராக இல்லை.
Verse 23
ﯖﯗﯘﯙ
ﯚ
திட்டவட்டமாக, தெளிவான (வானக்) கோடியில் அவர் (-நபி முஹம்மது) அவரை (-ஜிப்ரயீலை)க் கண்டார்.
Verse 24
ﯛﯜﯝﯞﯟ
ﯠ
மறைவானவற்றில் (அல்லாஹ் இறக்கிய வேதத்தை மக்களுக்கு கற்பிப்பதில்) அவர் கஞ்சனாக (-குறைவு செய்பவராக) இல்லை.
Verse 25
ﯡﯢﯣﯤﯥ
ﯦ
அது, (-குர்ஆன்) எறியப்பட்ட ஷைத்தானின் கூற்றாக இல்லை.
Verse 26
ﯧﯨ
ﯩ
ஆகவே, (இதனை விட்டு) நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?
Verse 27
ﯪﯫﯬﯭﯮ
ﯯ
அது அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையாகவே தவிர (வேறு) இல்லை.
Verse 28
ﯰﯱﯲﯳﯴ
ﯵ
உங்களில் நேர்வழி நடக்க நாடியவருக்கு (அது அறிவுரையாகும். அவர் அதன் மூலம் நல்லறிவு பெறுவார்.)
Verse 29
அகிலத்தார்களின் இறைவனான அல்லாஹ் நாடினால் தவிர, (நீங்கள் நல்லறிவு பெற) நாடமாட்டீர்கள்.
تقدم القراءة