سورة العلق

الترجمة التاميلية - عمر شريف

الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா العلق இன் மொழிபெயர்ப்பு

الترجمة التاميلية - عمر شريف

நிச்சயமாக நாம் இதை "கத்ரு” இரவில் இறக்கினோம்.
Verse 2
அவன் மனிதனைக் கருவிலிருந்து படைத்தான்.
Verse 3
படிப்பீராக! இன்னும் உம் இறைவன் பெரும் கண்ணியவான் ஆவான்.
Verse 4
அவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான்.
மனிதனுக்கு அவன் அறியாததைக் கற்பித்தான்.
Verse 6
அவ்வாறல்ல, நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்,
Verse 7
தன்னைத் தேவையற்றவனாக எண்ணியதால் (அவன் வரம்பு மீறுகிறான்).
Verse 8
நிச்சயமாக மீட்சி உம் இறைவனின் பக்கம்தான் இருக்கிறது.
Verse 9
(நபியே! தொழுகையிலிருந்து) தடுப்பவனைப் பார்த்தீரா?
Verse 10
(அவன்) ஓர் அடியாரை அவர் தொழும்போது (தடுகின்றான்).
பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
Verse 12
அல்லது அவர் இறையச்சமிக்க நன்மையை ஏவினாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
Verse 13
பார்த்தீரா? அவன் பொய்ப்பித்தால், இன்னும் புறக்கணித்தால்
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
அவ்வாறல்ல, (அவன் தன் தீய செயல்களிலிருந்து) விலகவில்லையெனில் (அவனுடைய) நெற்றிமுடியைக் கடுமையாகப் பிடிப்போம்.
Verse 16
(அது அவன் பொய் கூறுகின்றவன், குற்றம் புரிகின்றவன் உடைய) நெற்றி முடி. (இன்னும் நரகத்தில் வீசுவோம்.)
Verse 17
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
Verse 18
நரகத்தின் காவலாளிகளை நாம் அழைப்போம்.
அவ்வாறல்ல, அவனுக்குக் கீழ்ப்படியாதீர்! (உம் இறைவனுக்குச்) சிரம் பணிவீராக! (அவனளவில்) நெருங்குவீராக!
تقدم القراءة