الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா العلق இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﮕﮖﮗﮘﮙ
ﮚ
நிச்சயமாக நாம் இதை "கத்ரு” இரவில் இறக்கினோம்.
Verse 2
ﮛﮜﮝﮞ
ﮟ
அவன் மனிதனைக் கருவிலிருந்து படைத்தான்.
Verse 3
ﮠﮡﮢ
ﮣ
படிப்பீராக! இன்னும் உம் இறைவன் பெரும் கண்ணியவான் ஆவான்.
Verse 4
ﮤﮥﮦ
ﮧ
அவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான்.
Verse 5
ﮨﮩﮪﮫﮬ
ﮭ
மனிதனுக்கு அவன் அறியாததைக் கற்பித்தான்.
Verse 6
ﮮﮯﮰﮱ
ﯓ
அவ்வாறல்ல, நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்,
Verse 7
ﯔﯕﯖ
ﯗ
தன்னைத் தேவையற்றவனாக எண்ணியதால் (அவன் வரம்பு மீறுகிறான்).
Verse 8
ﯘﯙﯚﯛ
ﯜ
நிச்சயமாக மீட்சி உம் இறைவனின் பக்கம்தான் இருக்கிறது.
Verse 9
ﯝﯞﯟ
ﯠ
(நபியே! தொழுகையிலிருந்து) தடுப்பவனைப் பார்த்தீரா?
Verse 10
ﯡﯢﯣ
ﯤ
(அவன்) ஓர் அடியாரை அவர் தொழும்போது (தடுகின்றான்).
Verse 11
ﯥﯦﯧﯨﯩ
ﯪ
பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
Verse 12
ﯫﯬﯭ
ﯮ
அல்லது அவர் இறையச்சமிக்க நன்மையை ஏவினாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
Verse 13
ﭑﭒﭓﭔ
ﭕ
பார்த்தீரா? அவன் பொய்ப்பித்தால், இன்னும் புறக்கணித்தால்
Verse 14
ﭖﭗﭘﭙﭚ
ﭛ
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
Verse 15
ﭜﭝﭞﭟﭠﭡ
ﭢ
அவ்வாறல்ல, (அவன் தன் தீய செயல்களிலிருந்து) விலகவில்லையெனில் (அவனுடைய) நெற்றிமுடியைக் கடுமையாகப் பிடிப்போம்.
Verse 16
ﭣﭤﭥ
ﭦ
(அது அவன் பொய் கூறுகின்றவன், குற்றம் புரிகின்றவன் உடைய) நெற்றி முடி. (இன்னும் நரகத்தில் வீசுவோம்.)
Verse 17
ﭧﭨ
ﭩ
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
Verse 18
ﭪﭫ
ﭬ
நரகத்தின் காவலாளிகளை நாம் அழைப்போம்.
Verse 19
ﭭﭮﭯﭰﭱﭲ
ﭳ
அவ்வாறல்ல, அவனுக்குக் கீழ்ப்படியாதீர்! (உம் இறைவனுக்குச்) சிரம் பணிவீராக! (அவனளவில்) நெருங்குவீராக!
تقدم القراءة