الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா عبس இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭑﭒ
ﭓ
(உலக முடிவுக்காகச்) சூரியன் மங்க வைக்கப்படும்போது,
Verse 2
ﭔﭕﭖ
ﭗ
அவரிடம் பார்வையற்றவர் வந்ததற்காக.
Verse 3
ﭘﭙﭚﭛ
ﭜ
இன்னும் (நபியே) நீர் அறிவீரா? அவர் பரிசுத்தமடையலாம்,
Verse 4
ﭝﭞﭟﭠ
ﭡ
அல்லது (உங்களிடம்) அவர் அறிவுரை பெறுவார். (அந்த) அறிவுரை அவருக்குப் பலனளிக்கலாம்.
Verse 5
ﭢﭣﭤ
ﭥ
ஆக, எவன் (தன்னை) தேவையற்றவனாகக் கருதினானோ,
Verse 6
ﭦﭧﭨ
ﭩ
நீர் அவனை (வரவேற்க) முன்னோக்குகிறீர் (அவனை கவனிக்கிறீர்).
Verse 7
ﭪﭫﭬﭭ
ﭮ
அவன் (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடையாதது உம்மீது (குற்றம்) இல்லை.
Verse 8
ﭯﭰﭱﭲ
ﭳ
ஆக, எவர் உம்மிடம் விரைந்தவராக வந்தாரோ,
Verse 9
ﭴﭵ
ﭶ
அவரோ (அல்லாஹ்வைப்) பயப்படுகிறவராக,
Verse 10
ﭷﭸﭹ
ﭺ
நீர் அவரை அலட்சியப்படுத்துகிறீர்.
Verse 11
ﭻﭼﭽ
ﭾ
அவ்வாறல்ல, நிச்சயமாக இது (-அத்தியாயம்) ஓர் அறிவுரை ஆகும்.
Verse 12
ﭿﮀﮁ
ﮂ
ஆகவே, யார் (நேர்வழியை) நாடுகிறாரோ (அவர்) இதை (-இந்த வேதத்தை) நினைவில் வைப்பார். (இதன் மூலம் நல்லுபதேசம் பெறுவார்.)
Verse 13
ﮃﮄﮅ
ﮆ
(இது) மிக்க கண்ணியமான ஏடுகளில் இருக்கிறது.
Verse 14
ﮇﮈ
ﮉ
(அந்த ஏடுகள்) மிக உயர்வானவை, மிகவும் தூய்மையானவை,
Verse 15
ﮊﮋ
ﮌ
(அவை) எழுதுபவர்களின் கைகளில் (பாதுகாக்கப்பட்டுள்ளது),
Verse 16
ﮍﮎ
ﮏ
(அவர்கள்) கண்ணியமானவர்கள், நல்லவர்கள்.
Verse 17
ﮐﮑﮒﮓ
ﮔ
(பாவம் செய்கின்ற) மனிதன் அழியட்டும்! அவன் எவ்வளவு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
Verse 18
ﮕﮖﮗﮘ
ﮙ
எந்தப் பொருளிலிருந்து (அல்லாஹ்) அவனைப் படைத்தான்?
Verse 19
ﮚﮛﮜﮝ
ﮞ
விந்திலிருந்து அவனைப் படைத்தான். (பல நிலைகளில்) அவனை அமைத்தான்.
Verse 20
ﮟﮠﮡ
ﮢ
பிறகு, பாதையை- (அவனுக்கு) அதை எளிதாக்கினான்.
Verse 21
ﮣﮤﮥ
ﮦ
பிறகு, அவனை மரணிக்கச் செய்தான்; அவனைப் புதைக்குழியில் தள்ளினான்.
Verse 22
ﮧﮨﮩﮪ
ﮫ
பிறகு, அவன் நாடியபோது அவனை உயிர்ப்பிப்பான்.
Verse 23
ﮬﮭﮮﮯﮰ
ﮱ
அவ்வாறல்ல, (அல்லாஹ்) அவனுக்குக் கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.
Verse 24
ﯓﯔﯕﯖ
ﯗ
ஆகவே, மனிதன் தன் உணவின் பக்கம் பார்க்கட்டும்.
Verse 25
ﯘﯙﯚﯛ
ﯜ
நிச்சயமாக நாம் (மழை) நீரைப் பொழிந்தோம்.
Verse 26
ﯝﯞﯟﯠ
ﯡ
பிறகு பூமியைப் பிளந்தோம்.
Verse 27
ﯢﯣﯤ
ﯥ
ஆக, அதில் தானியத்தை முளைக்க வைத்தோம்.
Verse 28
ﯦﯧ
ﯨ
இன்னும், திராட்சையையும், (பசுமையான) காய்கறியையும் (முளைக்க வைத்தோம்).
Verse 29
ﯩﯪ
ﯫ
இன்னும், ஸைத்தூனையும், பேரிச்சை மரத்தையும் (முளைக்க வைத்தோம்).
Verse 30
ﯬﯭ
ﯮ
இன்னும், அடர்ந்த தோட்டங்களையும் (முளைக்க வைத்தோம்).
Verse 31
ﯯﯰ
ﯱ
இன்னும், கனிகளையும், புற்பூண்டுகளையும் (முளைக்க வைத்தோம்).
Verse 32
ﯲﯳﯴ
ﯵ
(இவை அனைத்தையும்) உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலன் தருவதற்காக (நாம் முளைக்க வைத்தோம்).
Verse 33
ﯶﯷﯸ
ﯹ
ஆகவே, (ஒரு நாளில் மறுமையின்) செவிடாக்கும் சப்தம் வந்தால்,
Verse 34
ﯺﯻﯼﯽﯾ
ﯿ
அந்நாளில், மனிதன் தனது சகோதரனை விட்டும் விரண்டோடுவான்.
Verse 35
ﰀﰁ
ﰂ
இன்னும் தனது தாயை விட்டும், தனது தந்தையை விட்டும் (விரண்டோடுவான்).
Verse 36
ﰃﰄ
ﰅ
இன்னும், தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (விரண்டோடுவான்).
Verse 37
ﰆﰇﰈﰉﰊﰋ
ﰌ
அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், (மற்றவர்களை விட்டு) அவனைத் திருப்பிவிடுகின்ற நிலைமை இருக்கும்.
Verse 38
ﰍﰎﰏ
ﰐ
அந்நாளில் (சில) முகங்கள் ஒளிரக்கூடியதாக இருக்கும்.
Verse 39
ﰑﰒ
ﰓ
வை சிரித்தவையாக, நற்செய்தி பெற்றவையாக இருக்கும்.
Verse 40
ﰔﰕﰖﰗ
ﰘ
அந்நாளில் இன்னும் (சில) முகங்கள், அவற்றின் மீது புழுதி இருக்கும்.
Verse 41
ﭑﭒ
ﭓ
கருமை அவற்றை மூடிக்கொள்ளும்.
Verse 42
ﭔﭕﭖﭗ
ﭘ
இவர்கள்தான் பெரும் பாவிகளான நிராகரிப்பாளர்கள் ஆவர்.
تقدم القراءة