Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா عبس இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭑﭒ
ﭓ
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
Verse 2
ﭔﭕﭖ
ﭗ
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
Verse 3
ﭘﭙﭚﭛ
ﭜ
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
Verse 4
ﭝﭞﭟﭠ
ﭡ
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
Verse 5
ﭢﭣﭤ
ﭥ
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
Verse 6
ﭦﭧﭨ
ﭩ
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
Verse 7
ﭪﭫﭬﭭ
ﭮ
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
Verse 8
ﭯﭰﭱﭲ
ﭳ
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
Verse 9
ﭴﭵ
ﭶ
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
Verse 10
ﭷﭸﭹ
ﭺ
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
Verse 11
ﭻﭼﭽ
ﭾ
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
Verse 12
ﭿﮀﮁ
ﮂ
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
Verse 13
ﮃﮄﮅ
ﮆ
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
Verse 14
ﮇﮈ
ﮉ
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
Verse 15
ﮊﮋ
ﮌ
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
Verse 16
ﮍﮎ
ﮏ
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
Verse 17
ﮐﮑﮒﮓ
ﮔ
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
Verse 18
ﮕﮖﮗﮘ
ﮙ
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
Verse 19
ﮚﮛﮜﮝ
ﮞ
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
Verse 20
ﮟﮠﮡ
ﮢ
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
Verse 21
ﮣﮤﮥ
ﮦ
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.
Verse 22
ﮧﮨﮩﮪ
ﮫ
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
Verse 23
ﮬﮭﮮﮯﮰ
ﮱ
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
Verse 24
ﯓﯔﯕﯖ
ﯗ
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
Verse 25
ﯘﯙﯚﯛ
ﯜ
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
Verse 26
ﯝﯞﯟﯠ
ﯡ
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
Verse 27
ﯢﯣﯤ
ﯥ
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
Verse 28
ﯦﯧ
ﯨ
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
Verse 29
ﯩﯪ
ﯫ
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
Verse 30
ﯬﯭ
ﯮ
அடர்ந்த தோட்டங்களையும்,
Verse 31
ﯯﯰ
ﯱ
பழங்களையும், தீவனங்களையும்-
Verse 32
ﯲﯳﯴ
ﯵ
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
Verse 33
ﯶﯷﯸ
ﯹ
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
Verse 34
ﯺﯻﯼﯽﯾ
ﯿ
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
Verse 35
ﰀﰁ
ﰂ
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
Verse 36
ﰃﰄ
ﰅ
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
Verse 37
ﰆﰇﰈﰉﰊﰋ
ﰌ
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
Verse 38
ﰍﰎﰏ
ﰐ
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
Verse 39
ﰑﰒ
ﰓ
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
Verse 40
ﰔﰕﰖﰗ
ﰘ
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
Verse 41
ﭑﭒ
ﭓ
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
Verse 42
ﭔﭕﭖﭗ
ﭘ
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.
تقدم القراءة