Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா الإنفطار இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭑﭒﭓ
ﭔ
வானம் பிளந்து விடும்போது
Verse 2
ﭕﭖﭗ
ﭘ
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
Verse 3
ﭙﭚﭛ
ﭜ
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
Verse 4
ﭝﭞﭟ
ﭠ
கப்றுகள் திறக்கப்படும் போது,
Verse 5
ﭡﭢﭣﭤﭥ
ﭦ
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
Verse 6
ﭧﭨﭩﭪﭫﭬ
ﭭ
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
Verse 7
ﭮﭯﭰﭱ
ﭲ
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
Verse 8
ﭳﭴﭵﭶﭷﭸ
ﭹ
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
Verse 9
ﭺﭻﭼﭽ
ﭾ
இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
Verse 10
ﭿﮀﮁ
ﮂ
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
Verse 11
ﮃﮄ
ﮅ
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
Verse 12
ﮆﮇﮈ
ﮉ
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
Verse 13
ﮊﮋﮌﮍ
ﮎ
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
Verse 14
ﮏﮐﮑﮒ
ﮓ
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
Verse 15
ﮔﮕﮖ
ﮗ
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
Verse 16
ﮘﮙﮚﮛ
ﮜ
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
Verse 17
ﮝﮞﮟﮠﮡ
ﮢ
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
Verse 18
ﮣﮤﮥﮦﮧﮨ
ﮩ
பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
Verse 19
அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
تقدم القراءة