Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா النبأ இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭑﭒ
ﭓ
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
Verse 2
ﭔﭕﭖ
ﭗ
மகத்தான அச்செய்தியைப் பற்றி,
Verse 3
ﭘﭙﭚﭛ
ﭜ
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
Verse 4
ﭝﭞ
ﭟ
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
Verse 5
ﭠﭡﭢ
ﭣ
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
Verse 6
ﭤﭥﭦﭧ
ﭨ
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
Verse 7
ﭩﭪ
ﭫ
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
Verse 8
ﭬﭭ
ﭮ
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
Verse 9
ﭯﭰﭱ
ﭲ
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
Verse 10
ﭳﭴﭵ
ﭶ
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
Verse 11
ﭷﭸﭹ
ﭺ
மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
Verse 12
ﭻﭼﭽﭾ
ﭿ
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
Verse 13
ﮀﮁﮂ
ﮃ
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
Verse 14
ﮄﮅﮆﮇﮈ
ﮉ
அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
Verse 15
ﮊﮋﮌﮍ
ﮎ
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
Verse 16
ﮏﮐ
ﮑ
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
Verse 17
ﮒﮓﮔﮕﮖ
ﮗ
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
Verse 18
ﮘﮙﮚﮛﮜﮝ
ﮞ
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
Verse 19
ﮟﮠﮡﮢ
ﮣ
இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
Verse 20
ﮤﮥﮦﮧ
ﮨ
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
Verse 21
ﮩﮪﮫﮬ
ﮭ
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
Verse 22
ﮮﮯ
ﮰ
வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.
Verse 23
ﮱﯓﯔ
ﯕ
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
Verse 24
ﯖﯗﯘﯙﯚﯛ
ﯜ
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
Verse 25
ﯝﯞﯟ
ﯠ
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
Verse 26
ﯡﯢ
ﯣ
(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
Verse 27
ﯤﯥﯦﯧﯨ
ﯩ
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
Verse 28
ﯪﯫﯬ
ﯭ
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
Verse 29
ﯮﯯﯰﯱ
ﯲ
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
Verse 30
ﯳﯴﯵﯶﯷ
ﯸ
"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
Verse 31
ﭑﭒﭓ
ﭔ
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
Verse 32
ﭕﭖ
ﭗ
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
Verse 33
ﭘﭙ
ﭚ
ஒரே வயதுள்ள கன்னிகளும்.
Verse 34
ﭛﭜ
ﭝ
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
Verse 35
ﭞﭟﭠﭡﭢﭣ
ﭤ
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
Verse 36
ﭥﭦﭧﭨﭩ
ﭪ
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
Verse 37
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
Verse 38
ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
Verse 39
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
Verse 40
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
تقدم القراءة