Jan Trust Foundation - Tamil translation இலிருந்து التاميلية மொழியில் சூரா البلد இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭽﭾﭿﮀ
ﮁ
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
Verse 2
ﮂﮃﮄﮅ
ﮆ
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
Verse 3
ﮇﮈﮉ
ﮊ
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
Verse 4
ﮋﮌﮍﮎﮏ
ﮐ
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
Verse 5
ﮑﮒﮓﮔﮕﮖ
ﮗ
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
Verse 6
ﮘﮙﮚﮛ
ﮜ
"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.
Verse 7
ﮝﮞﮟﮠﮡ
ﮢ
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
Verse 8
ﮣﮤﮥﮦ
ﮧ
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
Verse 9
ﮨﮩ
ﮪ
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
Verse 10
ﮫﮬ
ﮭ
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
Verse 11
ﮮﮯﮰ
ﮱ
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
Verse 12
ﯓﯔﯕﯖ
ﯗ
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
Verse 13
ﯘﯙ
ﯚ
(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
Verse 14
ﯛﯜﯝﯞﯟﯠ
ﯡ
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
Verse 15
ﯢﯣﯤ
ﯥ
உறவினனான ஓர் அநாதைக்கோ,
Verse 16
ﯦﯧﯨﯩ
ﯪ
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
Verse 17
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
Verse 18
ﯵﯶﯷ
ﯸ
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
Verse 19
ﭑﭒﭓﭔﭕﭖ
ﭗ
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
Verse 20
ﭘﭙﭚ
ﭛ
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.
تقدم القراءة