الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா البلد இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭽﭾﭿﮀ
ﮁ
சூரியனின் மீது சத்தியமாக! அதன் பகலின் மீது சத்தியமாக! (ழுஹா: பகல், முற்பகல், வெளிச்சம்)
Verse 2
ﮂﮃﮄﮅ
ﮆ
நீர் இந்நகரத்தில் (எதிரிகளைத் தண்டிக்க) அனுமதிக்கப்பட்டவர்.
Verse 3
ﮇﮈﮉ
ﮊ
தந்தையின் மீதும், அவர் பெற்றெடுத்ததின் மீதும் சத்தியமாக!
Verse 4
ﮋﮌﮍﮎﮏ
ﮐ
திட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம்.
Verse 5
ﮑﮒﮓﮔﮕﮖ
ﮗ
தன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?
Verse 6
ﮘﮙﮚﮛ
ﮜ
அதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று கூறுகிறான்.
Verse 7
ﮝﮞﮟﮠﮡ
ﮢ
அவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?
Verse 8
ﮣﮤﮥﮦ
ﮧ
அவனுக்கு இரு கண்களை நாம் ஆக்கவில்லையா? (படைக்கவில்லையா?)
Verse 9
ﮨﮩ
ﮪ
இன்னும், ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் படைக்கவில்லையா?)
Verse 10
ﮫﮬ
ﮭ
இன்னும் இரு பாதைகளை அவனுக்கு நாம் வழிகாட்டினோம்.
Verse 11
ﮮﮯﮰ
ﮱ
அவன் ‘அகபா'வைக் கடக்கவில்லை.
Verse 12
ﯓﯔﯕﯖ
ﯗ
(நபியே!) "அகபா' என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Verse 13
ﯘﯙ
ﯚ
(அது) ஓர் அடிமையை விடுதலை செய்தல்,
Verse 14
ﯛﯜﯝﯞﯟﯠ
ﯡ
அல்லது கடும் பசியுடைய நாளில் உணவளிப்பது,
Verse 15
ﯢﯣﯤ
ﯥ
உறவினரான ஓர் அனாதைக்கு,
Verse 16
ﯦﯧﯨﯩ
ﯪ
அல்லது வறியவரான ஓர் ஏழைக்கு (உணவளிப்பதாகும்).
Verse 17
பிறகு, நம்பிக்கையைக் கொண்டவர்களிலும், பொறுமையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும் அவர் ஆகிவிட வேண்டும்.
Verse 18
ﯵﯶﯷ
ﯸ
இவர்கள் வலப்பக்கமுடையவர்கள் (-சொர்க்க வாசிகள்) ஆவார்கள்.
Verse 19
ﭑﭒﭓﭔﭕﭖ
ﭗ
நம் வசனங்களை நிராகரித்தவர்கள்தான் இடப்பக்கமுடையவர்கள் (அவர்கள் நரகவாசிகள்)
Verse 20
ﭘﭙﭚ
ﭛ
(அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்)நரகம் அவர்கள் மீது மூடப்படும்.
تقدم القراءة