الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா الأعلى இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﮟﮠﮡﮢ
ﮣ
(நபியே!) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா?
Verse 2
ﮤﮥﮦ
ﮧ
அவன்தான் படைத்தான்; இன்னும் ஒழுங்கு படுத்தினான்.
Verse 3
ﮨﮩﮪ
ﮫ
அவன்தான் நிர்ணயம் செய்தான்; இன்னும் வழிகாட்டினான்.
Verse 4
ﮬﮭﮮ
ﮯ
அவன்தான் பசுமையான புல்லை வெளியாக்கினான். (முளைக்க வைத்தான்.)
Verse 5
ﮰﮱﯓ
ﯔ
(பிறகு) அதைக் கருத்த (காய்ந்துபோன) சருகாக ஆக்கினான்.
Verse 6
ﯕﯖﯗ
ﯘ
(நபியே! அல்குர்ஆனை) உமக்குக் கற்பிப்போம். (அதிலிருந்து எதையும்) நீர் மறக்க மாட்டீர்,
Verse 7
அல்லாஹ் நாடியதைத் தவிர. நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிவான்.
Verse 8
ﯤﯥ
ﯦ
சொர்க்கப் பாதையை உமக்கு இலகுவாக்குவோம்.
Verse 9
ﯧﯨﯩﯪ
ﯫ
ஆகவே, அறிவுரை பலனளித்தால் அறிவுரை கூறுவீராக!
Verse 10
ﯬﯭﯮ
ﯯ
(அல்லாஹ்வை) பயப்படுகிறவர் (அதன் மூலம்) அறிவுரை பெறுவார்.
Verse 11
ﭑﭒ
ﭓ
இன்னும் பெரும் துர்ப்பாக்கியவான் அதைத் தவிர்த்துவிடுவான்.
Verse 12
ﭔﭕﭖﭗ
ﭘ
(அவன்) மாபெரும் (நரக) நெருப்பில் பற்றி எரிவான்.
Verse 13
ﭙﭚﭛﭜﭝﭞ
ﭟ
பிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும் வாழவும் மாட்டான்.
Verse 14
ﭠﭡﭢﭣ
ﭤ
(இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார்.
Verse 15
ﭥﭦﭧﭨ
ﭩ
இன்னும் (அவர்) தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்தார்; இன்னும் (ஐவேளை) தொழுதார்.
Verse 16
ﭪﭫﭬﭭ
ﭮ
மாறாக, (அற்ப) உலக வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.
Verse 17
ﭯﭰﭱ
ﭲ
மறுமையோ மிகச் சிறந்தது; என்றும் நிலையானது.
Verse 18
ﭳﭴﭵﭶﭷ
ﭸ
நிச்சயமாக இது முந்திய வேதங்களிலும் (கூறப்பட்டு) இருக்கிறது.
Verse 19
ﭹﭺﭻ
ﭼ
(இது) இப்றாஹீம் இன்னும் மூஸா உடைய வேதங்களில் (இருக்கிறது).
تقدم القراءة