الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா المرسلات இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﮑﮒ
ﮓ
எதைப் பற்றி (அவர்கள் தங்களுக்குள்) விசாரித்துக் கொள்கிறார்கள்?
Verse 2
ﮔﮕ
ﮖ
அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!
Verse 3
ﮗﮘ
ﮙ
(மேகங்களை பல திசைகளில்) பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
Verse 4
ﮚﮛ
ﮜ
(உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில்) தெளிவாக பிரித்துவிடக் கூடியவற்றின் மீது (-இறைவசனங்கள் மீது) சத்தியமாக!
Verse 5
ﮝﮞ
ﮟ
(நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக,
Verse 6
ﮠﮡﮢ
ﮣ
(அல்லாஹ்வின் புறத்தில் இருந்து) ஒரு காரணமாக அல்லது எச்சரிக்கையாக இருப்பதற்கு (வேதங்களை அவர்கள் இறக்குகிறார்கள்)!
Verse 7
ﮤﮥﮦ
ﮧ
நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது நிகழ்ந்தே தீரும்.
Verse 8
ﮨﮩﮪ
ﮫ
நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது,
Verse 9
ﮬﮭﮮ
ﮯ
வானம் பிளக்கப்படும் போது,
Verse 10
ﮰﮱﯓ
ﯔ
மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும் போது,
Verse 11
ﯕﯖﯗ
ﯘ
தூதர்கள் (மறுமையில்) ஒன்று சேர்க்கப்படும்போது,
Verse 12
ﯙﯚﯛ
ﯜ
எந்த நாளுக்காக அவர்கள் தாமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்!?
Verse 13
ﯝﯞ
ﯟ
(ஆம், மறுமையின்) தீர்ப்பு நாளுக்காக (அவர்கள் தாமதிக்கப்பட்டுள்ளார்கள்).
Verse 14
ﯠﯡﯢﯣﯤ
ﯥ
தீர்ப்பு நாள் என்னவென்று உமக்குத் தெரியுமா?
Verse 15
ﯦﯧﯨ
ﯩ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Verse 16
ﯪﯫﯬ
ﯭ
(நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
Verse 17
ﯮﯯﯰ
ﯱ
பிறகு, (அவர்களைப்போன்று நிராகரித்த) பின்னோர்களை(யும் அழிவில்) அவர்களுக்கு பின்தொடர வைத்தோம்.
Verse 18
ﯲﯳﯴ
ﯵ
இவ்வாறுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வோம்.
Verse 19
ﯶﯷﯸ
ﯹ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Verse 20
ﭑﭒﭓﭔﭕ
ﭖ
பலவீனமான ஒரு நீரிலிருந்து நாம் உங்களை படைக்கவில்லையா?
Verse 21
ﭗﭘﭙﭚ
ﭛ
உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம்,
Verse 22
ﭜﭝﭞ
ﭟ
குறிப்பிட்ட ஒரு தவணை வரை.
Verse 23
ﭠﭡﭢ
ﭣ
நாம் திட்ட மிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்.
Verse 24
ﭤﭥﭦ
ﭧ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Verse 25
ﭨﭩﭪﭫ
ﭬ
பூமியை ஒன்று சேர்க்கக்கூடியதாக (-மக்கள் அனைவரையும் சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக) நாம் ஆக்கவில்லையா?
Verse 26
ﭭﭮ
ﭯ
(பூமி தன் முதுகின் மேல்) உயிருள்ளவர்களையும் (தன் வயிற்றுக்குள்) இறந்தவர்களையும் (ஒன்று சேர்க்கக்கூடியதாக -அவர்கள் அனைவரையும் சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கி இருக்கின்றோம்.)
Verse 27
அதில் மிக பிரமாண்டமான மலைகளை நாம் ஆக்கினோம். உங்களுக்கு மதுரமான நீரை நாம் புகட்டினோம்.
Verse 28
ﭸﭹﭺ
ﭻ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Verse 29
ﭼﭽﭾﭿﮀﮁ
ﮂ
நீங்கள் எதை பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்களோ அதன் பக்கம் (இன்று) செல்லுங்கள்!
Verse 30
ﮃﮄﮅﮆﮇﮈ
ﮉ
மூன்று கிளைகளை உடைய (நெருப்பு) புகையின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்!
Verse 31
ﮊﮋﮌﮍﮎﮏ
ﮐ
அது நிழல்தரக்கூடியது அல்ல, அது (நெருப்பின்) ஜுவாலையை தடுக்காது.
Verse 32
ﮑﮒﮓﮔ
ﮕ
நிச்சயமாக அது (-நரகம்) மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்!
Verse 33
ﮖﮗﮘ
ﮙ
அவையோ கரு மஞ்சள் நிற ஒட்டகைகளைப் போல் இருக்கும்!
Verse 34
ﮚﮛﮜ
ﮝ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Verse 35
ﮞﮟﮠﮡ
ﮢ
இது அவர்கள் பேசாத நாளாகும்.
Verse 36
ﮣﮤﮥﮦ
ﮧ
அவர்களுக்கு அனுமதி தரப்படாது. (அனுமதி கொடுத்தால்தானே) அவர்கள் காரணம் கூறுவதற்கு.
Verse 37
ﮨﮩﮪ
ﮫ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Verse 38
ﮬﮭﮮﮯﮰﮱ
ﯓ
இது தீர்ப்பு நாளாகும். உங்களையும் முன்னோரையும் (ஒரே மைதானத்தில்) நாம் ஒன்று சேர்த்துள்ளோம்.
Verse 39
ﯔﯕﯖﯗﯘ
ﯙ
உங்களிடம் (எங்களுக்கு எதிராக தீங்கு செய்வதற்கு) ஒரு சூழ்ச்சி இருந்தால், எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்.
Verse 40
ﯚﯛﯜ
ﯝ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Verse 41
ﯞﯟﯠﯡﯢ
ﯣ
நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் நிழல்களிலும் ஊற்றுகளிலும்,
Verse 42
ﯤﯥﯦ
ﯧ
இன்னும் அவர்கள் விரும்புகின்ற பழங்களிலும் (-அவற்றைப் புசிப்பதிலும்) இருப்பார்கள்.
Verse 43
ﯨﯩﯪﯫﯬﯭ
ﯮ
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு (நல்ல அமல்களுக்கு) பகரமாக இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்!
Verse 44
ﯯﯰﯱﯲ
ﯳ
நிச்சயமாக நாம் நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
Verse 45
ﯴﯵﯶ
ﯷ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Verse 46
ﯸﯹﯺﯻﯼ
ﯽ
(இவ்வுலகில்) கொஞ்ச காலம் உண்ணுங்கள்! இன்புறுங்கள்! நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்!
Verse 47
ﯾﯿﰀ
ﰁ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Verse 48
ﰂﰃﰄﰅﰆﰇ
ﰈ
தொழுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால் அவர்கள் தொழ மாட்டார்கள்.
Verse 49
ﰉﰊﰋ
ﰌ
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Verse 50
ﰍﰎﰏﰐ
ﰑ
இதற்கு பின்னர், வேறு எந்த குர்ஆனை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்!
تقدم القراءة