الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா القيامة இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﮊﮋﮌﮍ
ﮎ
காலத்தில் இருந்து ஒரு நேரம் மனிதனுக்கு வரவில்லையா, (அந்த காலத்தில்) நினைவு கூறப்படுகின்ற ஒரு பொருளாக அவன் இருக்கவில்லை?
Verse 2
ﮏﮐﮑﮒ
ﮓ
பழிக்கின்ற ஆன்மாவின் மீது சத்தியம் செய்கிறேன்!
Verse 3
ﮔﮕﮖﮗﮘ
ﮙ
மனிதன் எண்ணுகின்றானா அவனுடைய எலும்புகளை (அவை உக்கிப்போன பின்னர்) அறவே நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் (அது நமக்கு முடியாது) என்று?
Verse 4
ﮚﮛﮜﮝﮞﮟ
ﮠ
ஏன் முடியாது! அவனுடைய விரல் நுனிகளை (கூட முன்பு இருந்தவாரே) சரியாக அமைப்பதற்கு நாம் ஆற்றலுடையவர்கள் ஆவோம்.
Verse 5
ﮡﮢﮣﮤﮥ
ﮦ
மாறாக, மனிதன் தனது வருங்காலத்திலும் பாவம் செய்வதற்கே நாடுகின்றான்.
Verse 6
ﮧﮨﮩﮪ
ﮫ
மறுமை நாள் எப்போது வரும் என்று கேட்கிறான்.
Verse 7
ﮬﮭﮮ
ﮯ
பார்வை (திடுக்கிட்டு) திகைத்துவிட்டால்,
Verse 8
ﮰﮱ
ﯓ
இன்னும், சந்திரன் ஒளி இழந்து விட்டால்,
Verse 9
ﯔﯕﯖ
ﯗ
சூரியனும் சந்திரனும் (ஒளி இல்லாமல்) ஒன்று சேர்க்கப்ப(ட்டு பூமியில் எறியப்ப)ட்டால்,
Verse 10
ﯘﯙﯚﯛﯜ
ﯝ
அந்நாளில் மனிதன் கூறுவான்: “தப்பிக்குமிடம் எங்கே? என்று”
Verse 11
ﯞﯟﯠ
ﯡ
அவ்வாறல்ல, தப்பித்து ஓட அறவே முடியாது (-பாவிகளுக்கு பாதுகாப்பான இடம் ஏதும் இருக்காது).
Verse 12
ﯢﯣﯤﯥ
ﯦ
அந்நாளில் உமது இறைவன் பக்கம்தான் இறுதியாக நிலையான தங்குமிடம் இருக்கிறது.
Verse 13
ﯧﯨﯩﯪﯫﯬ
ﯭ
மனிதன் அந்நாளில் தான் முந்தி செய்ததையும் பிந்தி செய்ததையும் (பழைய, புதிய செயல்கள் அனைத்தையும்) அறிவிக்கப்படுவான்.
Verse 14
ﯮﯯﯰﯱﯲ
ﯳ
மாறாக, மனிதன் அவனுக்கே சாட்சியாக இருப்பான். (அவன் செய்த செயல்களுக்கு அவனது உறுப்புகளே அவனுக்கு எதிராக சாட்சி கூறும்.)
Verse 15
ﯴﯵﯶ
ﯷ
அவன் தனது காரணங்களை (எல்லாம்) கூறினாலும் (அவனிடமிருந்து அவை ஏற்கப்படாது).
Verse 16
ﯸﯹﯺﯻﯼﯽ
ﯾ
(நபியே!) இதை நீர் அவசரமாக (மனனம்) செய்வதற்காக இதற்கு (-இதை ஓதுவதற்கு) உமது நாவை அசைக்காதீர்.
Verse 17
ﯿﰀﰁﰂ
ﰃ
நிச்சயமாக அதை (உமது உள்ளத்தில்) ஒன்று சேர்ப்பதும் அதை (உமக்கு) ஓதவைப்பதும் நம்மீது கடமையாகும்.
Verse 18
ﰄﰅﰆﰇ
ﰈ
இதை நாம் ஓதினால் அது ஓதப்படுவதை நீர் பின்தொடர்வீராக! (-செவிதாழ்த்தி கேட்ப்பீராக!)
Verse 19
ﰉﰊﰋﰌ
ﰍ
பிறகு, நிச்சயமாக அதை விவரிப்பது நம்மீது கடமையாகும்.
Verse 20
ﭑﭒﭓﭔ
ﭕ
அவ்வாறல்ல, (-மறுமையில் நீங்கள் எழுப்பப்பட மாட்டீர்கள், உங்கள் செயல்களுக்கு உங்களுக்கு கேள்வி கணக்கு இல்லை என்று நீங்கள் கூறுவது போல் அல்ல உண்மை நிலவரம்.) மாறாக, நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை நேசிக்கிறீர்கள்.
Verse 21
ﭖﭗ
ﭘ
மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
Verse 22
ﭙﭚﭛ
ﭜ
அந்நாளில் சில முகங்கள் செழிப்பாக (பிரகாசமாக) இருக்கும்.
Verse 23
ﭝﭞﭟ
ﭠ
தமது இறைவனை பார்த்துக் கொண்டிருக்கும்.
Verse 24
ﭡﭢﭣ
ﭤ
இன்னும், அந்நாளில் சில முகங்கள் கருத்து காய்ந்துபோய் இருக்கும்.
Verse 25
ﭥﭦﭧﭨﭩ
ﭪ
அதற்கு கடுமையான ஒரு பிரச்சனை நிகழப்போகிறது என்று அறிந்துகொள்ளும்.
Verse 26
ﭫﭬﭭﭮ
ﭯ
அவ்வாறல்ல! (-தங்களின் இணைவைத்தலுக்காகவும் பாவங்களுக்காகவும் தாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம் என்று இணைவைப்பவர்கள் எண்ணுவது போல் அல்ல. பாவியின்) உயிர் (பிரிகின்ற நேரத்தில் அது) தொண்டைக் குழியை அடைந்தால்,
Verse 27
ﭰﭱﭲﭳ
ﭴ
ஒதிப்பார்ப்பவர் யாரும் இருக்கின்றாரா என்று கேட்கப்பட்டால்,
Verse 28
ﭵﭶﭷ
ﭸ
நிச்சயமாக இது (உலகை விட்டு நாம் பிரியப் போகின்ற) பிரிவுதான் என்பதை அவன் அறிந்துகொண்டால்,
Verse 29
ﭹﭺﭻ
ﭼ
(மறுமையின்) கெண்டைக் காலுடன் (உலகத்தின்) கெண்டைக் கால் பின்னிக்கொண்டால், (உலகத்தின் கடுமையான இறுதி நிலையும் மறுமையின் பயங்கரமான முதல் நிலையும் மனிதனுக்குள் அப்போது ஒன்று சேரும்.)
Verse 30
ﭽﭾﭿﮀ
ﮁ
அந்நாளில், உமது இறைவனிடமே (உயிர்கள்) ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம் இருக்கிறது. (அப்போது அந்தப் பாவி தனது தண்டனையை அறிந்து கொள்வான்.)
Verse 31
ﮂﮃﮄﮅ
ﮆ
அவன் (இறை வேதத்தை) உண்மைப்படுத்தவில்லை. தொழவும் இல்லை.
Verse 32
ﮇﮈﮉ
ﮊ
எனினும், அவன் பொய்ப்பித்தான்; விலகிச் சென்றான்.
Verse 33
ﮋﮌﮍﮎﮏ
ﮐ
பிறகு, தனது குடும்பத்தாரிடம் கர்வம் கொண்டவனாக (திரும்பி) சென்றான்.
Verse 34
ﮑﮒﮓ
ﮔ
உனக்குக் கேடுதான், இன்னும் (உனக்கு) கேடுதான்.
Verse 35
ﮕﮖﮗﮘ
ﮙ
பிறகும், உனக்குக் கேடுதான், இன்னும் (உனக்கு) கேடுதான்.
Verse 36
ﮚﮛﮜﮝﮞ
ﮟ
மனிதன் தான் சும்மா விட்டுவிடப்படுவான் என்று எண்ணுகின்றானா?
Verse 37
ﮠﮡﮢﮣﮤﮥ
ﮦ
அவன் (கருவறையில்) செலுத்தப்படுகின்ற இந்திரியத்தின் ஒரு துளி விந்தாக இருக்கவில்லையா?
Verse 38
ﮧﮨﮩﮪﮫ
ﮬ
பிறகு, (அந்த மனிதன்) கருவாக (இரத்தக்கட்டியாக) இருந்தான். அவன்(தான்) (அவனைப்) படைத்தான், இன்னும் செம்மையாக ஆக்கினான்.
Verse 39
ﮭﮮﮯﮰﮱ
ﯓ
அதிலிருந்து ஆண், பெண் ஜோடிகளை அவன்தான் ஆக்கினான்.
Verse 40
இ(த்தகைய)வன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றல் உள்ளவனாக இல்லையா?
تقدم القراءة