الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா الغاشية இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﭽﭾﭿﮀ
ﮁ
விடியற் காலையின் மீது சத்தியமாக!
Verse 2
ﮂﮃﮄ
ﮅ
(நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும்.
Verse 3
ﮆﮇ
ﮈ
(அவை தண்டனையை) அனுபவிக்கும்; (வேதனையால் சிரமப்பட்டு) களைப்படையும்; (அவை உலகத்தில் வாழும்போது பாவங்களை நன்மையென எண்ணிச் செயல்பட்டவை; அவற்றில் உறுதியாக இருந்தவை; அவற்றைச் செய்வதில் களைத்தவை)
Verse 4
ﮉﮊﮋ
ﮌ
(அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் பற்றி எரியும்.
Verse 5
ﮍﮎﮏﮐ
ﮑ
கொதிக்கக்கூடிய ஊற்றிலிருந்து (அவற்றுக்கு நீர்) புகட்டப்படும்.
Verse 6
ﮒﮓﮔﮕﮖﮗ
ﮘ
அவற்றுக்கு (- அவர்களுக்கு முட்களை உடைய) விஷச் செடியிலிருந்தே தவிர வேறு உணவு இல்லை.
Verse 7
ﮙﮚﮛﮜﮝﮞ
ﮟ
(அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(க பலனளிக்)காது.
Verse 8
ﮠﮡﮢ
ﮣ
(நம்பிக்கையாளர்களின்) முகங்கள் அந்நாளில் இன்புற்றிருக்கும்;
Verse 9
ﮤﮥ
ﮦ
தன் செயலுக்காக திருப்தியடைந்திருக்கும்.
Verse 10
ﮧﮨﮩ
ﮪ
(அவை) உயர்வான சொர்க்கத்தில் இருக்கும்.
Verse 11
ﮫﮬﮭﮮ
ﮯ
அதில் (அவை) வீண் பேச்சை செவியுறாது.
Verse 12
ﮰﮱﯓ
ﯔ
அதில் (தொடர்ந்து) ஓடக்கூடிய ஊற்று(கள்) இருக்கும்;
Verse 13
ﯕﯖﯗ
ﯘ
அதில் உயர்வான கட்டில்கள் இருக்கும்;
Verse 14
ﯙﯚ
ﯛ
இன்னும் (நதிகளுக்கு அருகில் நிரப்பி) வைக்கப்பட்ட குவளைகள் இருக்கும்;
Verse 15
ﯜﯝ
ﯞ
இன்னும் (சாய்வதற்கு) வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகள் இருக்கும்;
Verse 16
ﯟﯠ
ﯡ
இன்னும் விரிக்கப்பட்ட உயர்ரக விரிப்புகள் இருக்கும்.
Verse 17
ﯢﯣﯤﯥﯦﯧ
ﯨ
(அவர்கள்) ஒட்டகத்தின் பக்கம் பார்க்க மாட்டார்களா? எவ்வாறு அது படைக்கப்பட்டுள்ளது? என்று
Verse 18
ﯩﯪﯫﯬ
ﯭ
இன்னும் வானத்தின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது? என்று
Verse 19
ﯮﯯﯰﯱ
ﯲ
இன்னும் மலைகளின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது நிறுவப்பட்டுள்ளது? என்று
Verse 20
ﯳﯴﯵﯶ
ﯷ
இன்னும் பூமியின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது விரிக்கப்பட்டுள்ளது? என்று
Verse 21
ﯸﯹﯺﯻ
ﯼ
ஆகவே, அறிவுரை கூறுவீராக! நீரெல்லாம் அறிவுரை கூறுபவர்தான்.
Verse 22
ﯽﯾﯿ
ﰀ
அவர்களை நிர்ப்பந்திப்பவராக நீர் இல்லை.
Verse 23
ﭑﭒﭓﭔ
ﭕ
எனினும், யார் (அறிவுரையை விட்டு) விலகினாரோ, இன்னும் நிராகரித்தாரோ,
Verse 24
ﭖﭗﭘﭙ
ﭚ
அவரை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையால் வேதனை செய்வான்.
Verse 25
ﭛﭜﭝ
ﭞ
நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது.
Verse 26
ﭟﭠﭡﭢ
ﭣ
பிறகு நிச்சயமாக அவர்களை விசாரிப்பது நம் மீதே (பொறுப்பாக) இருக்கிறது. (ஆகவே, அவர்களின் செயல்களைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்த கூலி கொடுப்போம்.)
تقدم القراءة