الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா الزلزلة இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﮅﮆﮇﮈ
ﮉ
1. (பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,
Verse 2
ﮊﮋﮌ
ﮍ
2. அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்,
Verse 3
ﮎﮏﮐﮑ
ﮒ
3. மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்.
Verse 4
ﮓﮔﮕ
ﮖ
4. அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்.
Verse 5
ﮗﮘﮙﮚ
ﮛ
5. (இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்.
Verse 6
ﮜﮝﮞﮟﮠﮡ
ﮢ
6. அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.
Verse 7
ﮣﮤﮥﮦﮧﮨ
ﮩ
7. ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார்.
Verse 8
ﮪﮫﮬﮭﮮﮯ
ﮰ
8. (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்.
تقدم القراءة