ترجمة معاني سورة الفجر باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation
ﰡ
آية رقم 1
ﭤ
ﭥ
விடியற் காலையின் மீது சத்தியமாக,
آية رقم 2
ﭦﭧ
ﭨ
பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
آية رقم 3
ﭩﭪ
ﭫ
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
آية رقم 4
ﭬﭭﭮ
ﭯ
செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
آية رقم 5
ﭰﭱﭲﭳﭴﭵ
ﭶ
இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
آية رقم 6
ﭷﭸﭹﭺﭻﭼ
ﭽ
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
آية رقم 7
ﭾﭿﮀ
ﮁ
(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,
آية رقم 8
ﮂﮃﮄﮅﮆﮇ
ﮈ
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
آية رقم 9
ﮉﮊﮋﮌﮍ
ﮎ
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
آية رقم 10
ﮏﮐﮑ
ﮒ
மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
آية رقم 11
ﮓﮔﮕﮖ
ﮗ
அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
آية رقم 12
ﮘﮙﮚ
ﮛ
அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
آية رقم 13
ﮜﮝﮞﮟﮠ
ﮡ
எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
آية رقم 14
ﮢﮣﮤ
ﮥ
நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.
آية رقم 15
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான்.
آية رقم 16
எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.
آية رقم 17
ﯞﯟﯠﯡﯢﯣ
ﯤ
அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
آية رقم 18
ﯥﯦﯧﯨﯩ
ﯪ
ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
آية رقم 19
ﯫﯬﯭﯮ
ﯯ
இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
آية رقم 20
ﯰﯱﯲﯳ
ﯴ
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
آية رقم 21
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
آية رقم 22
ﯽﯾﯿﰀﰁ
ﰂ
உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,
آية رقم 23
அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
آية رقم 24
ﭜﭝﭞﭟ
ﭠ
"என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.
آية رقم 25
ﭡﭢﭣﭤﭥ
ﭦ
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
آية رقم 26
ﭧﭨﭩﭪ
ﭫ
மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
آية رقم 27
ﭬﭭﭮ
ﭯ
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
آية رقم 28
ﭰﭱﭲﭳﭴ
ﭵ
நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
آية رقم 29
ﭶﭷﭸ
ﭹ
நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
آية رقم 30
ﭺﭻ
ﭼ
மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
تقدم القراءة