19. வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுக்குரியனவே! அவனிடத்தில் இருக்கக்கூடிய (வானவர்களாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமை அடிக்கவும் மாட்டார்கள், சோர்வுறவும் மாட்டார்கள்.
الترجمة التاميلية
وَلَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَمَنۡ عِندَهُۥ لَا يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِهِۦ وَلَا يَسۡتَحۡسِرُونَ
வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அவனுக்கே (உரிமையானவர்கள்). அவனிடம் இருப்பவர்கள் (-வானவர்கள்) அவனை வணங்குவதைவிட்டு பெருமை அடிக்க மாட்டார்கள். இன்னும் சோர்வடைய மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف