ترجمة سورة المرسلات

الترجمة التاميلية - عمر شريف
ترجمة معاني سورة المرسلات باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف .

எதைப் பற்றி (அவர்கள் தங்களுக்குள்) விசாரித்துக் கொள்கிறார்கள்?
அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!
(மேகங்களை பல திசைகளில்) பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
(உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில்) தெளிவாக பிரித்துவிடக் கூடியவற்றின் மீது (-இறைவசனங்கள் மீது) சத்தியமாக!
(நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக,
(அல்லாஹ்வின் புறத்தில் இருந்து) ஒரு காரணமாக அல்லது எச்சரிக்கையாக இருப்பதற்கு (வேதங்களை அவர்கள் இறக்குகிறார்கள்)!
நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது நிகழ்ந்தே தீரும்.
நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது,
வானம் பிளக்கப்படும் போது,
மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும் போது,
தூதர்கள் (மறுமையில்) ஒன்று சேர்க்கப்படும்போது,
எந்த நாளுக்காக அவர்கள் தாமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்!?
(ஆம், மறுமையின்) தீர்ப்பு நாளுக்காக (அவர்கள் தாமதிக்கப்பட்டுள்ளார்கள்).
தீர்ப்பு நாள் என்னவென்று உமக்குத் தெரியுமா?
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
(நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
பிறகு, (அவர்களைப்போன்று நிராகரித்த) பின்னோர்களை(யும் அழிவில்) அவர்களுக்கு பின்தொடர வைத்தோம்.
இவ்வாறுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வோம்.
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
பலவீனமான ஒரு நீரிலிருந்து நாம் உங்களை படைக்கவில்லையா?
உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம்,
குறிப்பிட்ட ஒரு தவணை வரை.
நாம் திட்ட மிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்.
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
பூமியை ஒன்று சேர்க்கக்கூடியதாக (-மக்கள் அனைவரையும் சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக) நாம் ஆக்கவில்லையா?
(பூமி தன் முதுகின் மேல்) உயிருள்ளவர்களையும் (தன் வயிற்றுக்குள்) இறந்தவர்களையும் (ஒன்று சேர்க்கக்கூடியதாக -அவர்கள் அனைவரையும் சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கி இருக்கின்றோம்.)
அதில் மிக பிரமாண்டமான மலைகளை நாம் ஆக்கினோம். உங்களுக்கு மதுரமான நீரை நாம் புகட்டினோம்.
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
நீங்கள் எதை பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்களோ அதன் பக்கம் (இன்று) செல்லுங்கள்!
மூன்று கிளைகளை உடைய (நெருப்பு) புகையின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்!
அது நிழல்தரக்கூடியது அல்ல, அது (நெருப்பின்) ஜுவாலையை தடுக்காது.
நிச்சயமாக அது (-நரகம்) மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்!
அவையோ கரு மஞ்சள் நிற ஒட்டகைகளைப் போல் இருக்கும்!
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
இது அவர்கள் பேசாத நாளாகும்.
அவர்களுக்கு அனுமதி தரப்படாது. (அனுமதி கொடுத்தால்தானே) அவர்கள் காரணம் கூறுவதற்கு.
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
இது தீர்ப்பு நாளாகும். உங்களையும் முன்னோரையும் (ஒரே மைதானத்தில்) நாம் ஒன்று சேர்த்துள்ளோம்.
உங்களிடம் (எங்களுக்கு எதிராக தீங்கு செய்வதற்கு) ஒரு சூழ்ச்சி இருந்தால், எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்.
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் நிழல்களிலும் ஊற்றுகளிலும்,
இன்னும் அவர்கள் விரும்புகின்ற பழங்களிலும் (-அவற்றைப் புசிப்பதிலும்) இருப்பார்கள்.
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு (நல்ல அமல்களுக்கு) பகரமாக இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்!
நிச்சயமாக நாம் நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
(இவ்வுலகில்) கொஞ்ச காலம் உண்ணுங்கள்! இன்புறுங்கள்! நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்!
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
தொழுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால் அவர்கள் தொழ மாட்டார்கள்.
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
இதற்கு பின்னர், வேறு எந்த குர்ஆனை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்!
Icon