ترجمة معاني سورة النازعات باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation
ﰡ
آية رقم 1
ﮢﮣ
ﮤ
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
آية رقم 2
ﮥﮦ
ﮧ
(நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
آية رقم 3
ﮨﮩ
ﮪ
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
آية رقم 4
ﮫﮬ
ﮭ
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
آية رقم 5
ﮮﮯ
ﮰ
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
آية رقم 6
ﮱﯓﯔ
ﯕ
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;
آية رقم 7
ﯖﯗ
ﯘ
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
آية رقم 8
ﯙﯚﯛ
ﯜ
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
آية رقم 9
ﯝﯞ
ﯟ
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
آية رقم 10
ﯠﯡﯢﯣﯤ
ﯥ
"நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.
آية رقم 11
ﯦﯧﯨﯩ
ﯪ
"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"
آية رقم 12
ﯫﯬﯭﯮﯯ
ﯰ
"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.
آية رقم 13
ﯱﯲﯳﯴ
ﯵ
ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
آية رقم 14
ﯶﯷﯸ
ﯹ
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
آية رقم 15
ﯺﯻﯼﯽ
ﯾ
(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
آية رقم 16
ﯿﰀﰁﰂﰃﰄ
ﰅ
'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
آية رقم 17
ﭑﭒﭓﭔﭕ
ﭖ
"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."
آية رقم 18
ﭗﭘﭙﭚﭛﭜ
ﭝ
இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.
آية رقم 19
ﭞﭟﭠﭡ
ﭢ
"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
آية رقم 20
ﭣﭤﭥ
ﭦ
ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
آية رقم 21
ﭧﭨ
ﭩ
ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
آية رقم 22
ﭪﭫﭬ
ﭭ
பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.
آية رقم 23
ﭮﭯ
ﭰ
அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
آية رقم 24
ﭱﭲﭳﭴ
ﭵ
"நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான்.
آية رقم 25
ﭶﭷﭸﭹﭺ
ﭻ
இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
آية رقم 26
ﭼﭽﭾﭿﮀﮁ
ﮂ
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.
آية رقم 27
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
آية رقم 28
ﮋﮌﮍ
ﮎ
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
آية رقم 29
ﮏﮐﮑﮒ
ﮓ
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.
آية رقم 30
ﮔﮕﮖﮗ
ﮘ
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
آية رقم 31
ﮙﮚﮛﮜ
ﮝ
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
آية رقم 32
ﮞﮟ
ﮠ
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
آية رقم 33
ﮡﮢﮣ
ﮤ
உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
آية رقم 34
ﮥﮦﮧﮨ
ﮩ
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
آية رقم 35
ﮪﮫﮬﮭﮮ
ﮯ
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
آية رقم 36
ﮰﮱﯓﯔ
ﯕ
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
آية رقم 37
ﯖﯗﯘ
ﯙ
எனவே, எவன் வரம்பை மீறினானோ -
آية رقم 38
ﯚﯛﯜ
ﯝ
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
آية رقم 39
ﯞﯟﯠﯡ
ﯢ
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
آية رقم 40
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
آية رقم 41
ﯭﯮﯯﯰ
ﯱ
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
آية رقم 42
ﯲﯳﯴﯵﯶ
ﯷ
(நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
آية رقم 43
ﯸﯹﯺﯻ
ﯼ
அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
آية رقم 44
ﯽﯾﯿ
ﰀ
அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
آية رقم 45
ﰁﰂﰃﰄﰅ
ﰆ
அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
آية رقم 46
நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.
تقدم القراءة