ترجمة معاني سورة القيامة باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation
ﰡ
آية رقم 1
ﮊﮋﮌﮍ
ﮎ
கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
آية رقم 2
ﮏﮐﮑﮒ
ﮓ
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
آية رقم 3
ﮔﮕﮖﮗﮘ
ﮙ
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
آية رقم 4
ﮚﮛﮜﮝﮞﮟ
ﮠ
அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
آية رقم 5
ﮡﮢﮣﮤﮥ
ﮦ
எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
آية رقم 6
ﮧﮨﮩﮪ
ﮫ
"கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
آية رقم 7
ﮬﮭﮮ
ﮯ
ஆகவே, பார்வையும் மழுங்கி-
آية رقم 8
ﮰﮱ
ﯓ
சந்திரன் ஒளியும் மங்கி-
آية رقم 9
ﯔﯕﯖ
ﯗ
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
آية رقم 10
ﯘﯙﯚﯛﯜ
ﯝ
அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.
آية رقم 11
ﯞﯟﯠ
ﯡ
"இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்).
آية رقم 12
ﯢﯣﯤﯥ
ﯦ
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
آية رقم 13
ﯧﯨﯩﯪﯫﯬ
ﯭ
அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
آية رقم 14
ﯮﯯﯰﯱﯲ
ﯳ
எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்.
آية رقم 15
ﯴﯵﯶ
ﯷ
அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
آية رقم 16
ﯸﯹﯺﯻﯼﯽ
ﯾ
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.
آية رقم 17
ﯿﰀﰁﰂ
ﰃ
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
آية رقم 18
ﰄﰅﰆﰇ
ﰈ
எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
آية رقم 19
ﰉﰊﰋﰌ
ﰍ
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
آية رقم 20
ﭑﭒﭓﭔ
ﭕ
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
آية رقم 21
ﭖﭗ
ﭘ
ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
آية رقم 22
ﭙﭚﭛ
ﭜ
அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
آية رقم 23
ﭝﭞﭟ
ﭠ
தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.
آية رقم 24
ﭡﭢﭣ
ﭤ
ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
آية رقم 25
ﭥﭦﭧﭨﭩ
ﭪ
இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
آية رقم 26
ﭫﭬﭭﭮ
ﭯ
அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,
آية رقم 27
ﭰﭱﭲﭳ
ﭴ
"மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.
آية رقم 28
ﭵﭶﭷ
ﭸ
ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
آية رقم 29
ﭹﭺﭻ
ﭼ
இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
آية رقم 30
ﭽﭾﭿﮀ
ﮁ
உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.
آية رقم 31
ﮂﮃﮄﮅ
ﮆ
ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை.
آية رقم 32
ﮇﮈﮉ
ﮊ
ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
آية رقم 33
ﮋﮌﮍﮎﮏ
ﮐ
பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
آية رقم 34
ﮑﮒﮓ
ﮔ
கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
آية رقم 35
ﮕﮖﮗﮘ
ﮙ
பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
آية رقم 36
ﮚﮛﮜﮝﮞ
ﮟ
வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
آية رقم 37
ﮠﮡﮢﮣﮤﮥ
ﮦ
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
آية رقم 38
ﮧﮨﮩﮪﮫ
ﮬ
பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
آية رقم 39
ﮭﮮﮯﮰﮱ
ﯓ
பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
آية رقم 40
(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?
تقدم القراءة