ترجمة معاني سورة الإنفطار باللغة التاميلية من كتاب الترجمة التاميلية
عبد الحميد الباقوي
ﰡ
آية رقم 1
ﭑﭒﭓ
ﭔ
1. (உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்,
آية رقم 2
ﭕﭖﭗ
ﭘ
2. நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்,
آية رقم 3
ﭙﭚﭛ
ﭜ
3. கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்,
آية رقم 4
ﭝﭞﭟ
ﭠ
4. சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)
آية رقم 5
ﭡﭢﭣﭤﭥ
ﭦ
5. ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவற்றையும் நன்கறிந்துகொள்ளும்.
آية رقم 6
ﭧﭨﭩﭪﭫﭬ
ﭭ
6. மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது?
آية رقم 7
ﭮﭯﭰﭱ
ﭲ
7. அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னைப் படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்.
آية رقم 8
ﭳﭴﭵﭶﭷﭸ
ﭹ
8. அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்.
آية رقم 9
ﭺﭻﭼﭽ
ﭾ
9. எனினும், (மனிதர்களே!) நீங்கள் கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகிறீர்கள்.
آية رقم 10
ﭿﮀﮁ
ﮂ
10. நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
آية رقم 11
ﮃﮄ
ﮅ
11. அவர்கள் (வானவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.
آية رقم 12
ﮆﮇﮈ
ﮉ
12. நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.
آية رقم 13
ﮊﮋﮌﮍ
ﮎ
13. ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள்.
آية رقم 14
ﮏﮐﮑﮒ
ﮓ
14. நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.
آية رقم 15
ﮔﮕﮖ
ﮗ
15. கூலி கொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள்.
آية رقم 16
ﮘﮙﮚﮛ
ﮜ
16. அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது.
آية رقم 17
ﮝﮞﮟﮠﮡ
ﮢ
17. (நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா?
آية رقم 18
ﮣﮤﮥﮦﮧﮨ
ﮩ
18. பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா?
آية رقم 19
19. அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும்.
تقدم القراءة