39. அதற்கவன் ‘‘என் இறைவனே! நீ என்னை வழி கெடுத்ததன் காரணமாக பூமியிலுள்ள (பொருள்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்.
الترجمة التاميلية
قَالَ رَبِّ بِمَآ أَغۡوَيۡتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ وَلَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ
(அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
Jan Trust Foundation - Tamil translation
“என் இறைவா! என்னை நீ வழிகெடுத்ததன் காரணமாக பூமியில் நிச்சயமாக (அசிங்கமான செயல்களை) அவர்களுக்கு அலங்கரிப்பேன்; இன்னும் நிச்சயமாக அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்”என்று (இப்லீஸ்) கூறினான்.
الترجمة التاميلية - عمر شريف