ترجمة معاني سورة الحاقة باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation
ﰡ
آية رقم 1
ﮯ
ﮰ
நிச்சயமானது.
آية رقم 2
ﮱﯓ
ﯔ
நிச்சயமானது எது?
آية رقم 3
ﯕﯖﯗﯘ
ﯙ
அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
آية رقم 4
ﯚﯛﯜﯝ
ﯞ
ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
آية رقم 5
ﯟﯠﯡﯢ
ﯣ
எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
آية رقم 6
ﯤﯥﯦﯧﯨﯩ
ﯪ
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
آية رقم 7
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
آية رقم 8
ﯼﯽﯾﯿﰀ
ﰁ
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
آية رقم 9
ﭑﭒﭓﭔﭕﭖ
ﭗ
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
آية رقم 10
ﭘﭙﭚﭛﭜﭝ
ﭞ
அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
آية رقم 11
தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
آية رقم 12
ﭧﭨﭩﭪﭫﭬ
ﭭ
அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
آية رقم 13
ﭮﭯﭰﭱﭲﭳ
ﭴ
எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:
آية رقم 14
ﭵﭶﭷﭸﭹﭺ
ﭻ
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
آية رقم 15
ﭼﭽﭾ
ﭿ
அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
آية رقم 16
ﮀﮁﮂﮃﮄ
ﮅ
வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.
آية رقم 17
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
آية رقم 18
ﮑﮒﮓﮔﮕﮖ
ﮗ
(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
آية رقم 19
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார்.
آية رقم 20
ﮢﮣﮤﮥﮦ
ﮧ
"நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்."
آية رقم 21
ﮨﮩﮪﮫ
ﮬ
ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -
آية رقم 22
ﮭﮮﮯ
ﮰ
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
آية رقم 23
ﮱﯓ
ﯔ
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.
آية رقم 24
"சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என அவர்களுக்குக் கூறப்படும்).
آية رقم 25
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
آية رقم 26
ﯩﯪﯫﯬ
ﯭ
"அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
آية رقم 27
ﯮﯯﯰ
ﯱ
"(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
آية رقم 28
ﯲﯳﯴﯵﯶ
ﯷ
"என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
آية رقم 29
ﯸﯹﯺ
ﯻ
"என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அரற்றுவான்).
آية رقم 30
ﯼﯽ
ﯾ
"(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்."
آية رقم 31
ﯿﰀﰁ
ﰂ
"பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
آية رقم 32
"பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்).
آية رقم 33
ﰋﰌﰍﰎﰏﰐ
ﰑ
"நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்."
آية رقم 34
ﰒﰓﰔﰕﰖ
ﰗ
"அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை."
آية رقم 35
ﰘﰙﰚﰛﰜ
ﰝ
"எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை."
آية رقم 36
ﭑﭒﭓﭔﭕ
ﭖ
"சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."
آية رقم 37
ﭗﭘﭙﭚ
ﭛ
"குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்."
آية رقم 38
ﭜﭝﭞﭟ
ﭠ
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
آية رقم 39
ﭡﭢﭣ
ﭤ
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)
آية رقم 40
ﭥﭦﭧﭨ
ﭩ
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
آية رقم 41
இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
آية رقم 42
(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.
آية رقم 43
ﭻﭼﭽﭾ
ﭿ
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.
آية رقم 44
ﮀﮁﮂﮃﮄ
ﮅ
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
آية رقم 45
ﮆﮇﮈ
ﮉ
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
آية رقم 46
ﮊﮋﮌﮍ
ﮎ
பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
آية رقم 47
ﮏﮐﮑﮒﮓﮔ
ﮕ
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
آية رقم 48
ﮖﮗﮘ
ﮙ
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
آية رقم 49
ﮚﮛﮜﮝﮞ
ﮟ
ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
آية رقم 50
ﮠﮡﮢﮣ
ﮤ
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
آية رقم 51
ﮥﮦﮧ
ﮨ
மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
آية رقم 52
ﮩﮪﮫﮬ
ﮭ
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.
تقدم القراءة