ترجمة معاني سورة القمر
 باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف
            .
            
                            
            
                                                                                                            ﰡ
                                                                                        
                    
                                                                                                                                        
                    
                                                                                    அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) புறக்கணிக்கின்றனர்; இன்னும் (இது ஒரு) தொடர்ச்சியான சூனியமாகும் என்றும் கூறுகின்றனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் அவர்கள் பொய்ப்பித்தனர்; தங்கள் மன இச்சைகளை அவர்கள் பின்பற்றினார்கள். எல்லாக் காரியங்களும் (அவற்றுக்குரிய இடத்தில்) நிலையாகத் தங்கக் கூடியதுதான். (நன்மை, நல்லவர்களை சொர்க்கத்தில் தங்க வைக்கும். தீமை, பாவிகளை நரகத்தில் தங்க வைக்கும்.)
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    திட்டவட்டமாக செய்திகளில் எதில் எச்சரிக்கை இருக்குமோ அது அவர்களிடம் வந்துவிட்டது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    மிக ஆழமான ஞானம் (-இந்த குர்ஆன் அவர்களிடம் வந்திருக்கின்றது). ஆனால், எச்சரிப்பாளர்கள் (பலர் எச்சரித்தும் அவர்களுக்கு அவர்கள்) பலனளிக்க முடியவில்லை.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஆகவே, அவர்களை விட்டு நீர் விலகி விடுவீராக! அழைப்பாளர் மிக கடினமான ஒன்றை நோக்கி (-மறுமையின் மைதானத்தை நோக்கி) அழைக்கின்ற நாளில்,
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவர்களது பார்வைகள் இழிவடைந்த நிலையில், (கூட்டமாக) பரவி வரக்கூடிய வெட்டுக் கிளிகளைப் போல் அவர்கள் புதைக்குழிகளை விட்டு (விரைந்து) வெளியேறுவார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அழைப்பாளரை நோக்கி பணிவுடன் பயத்துடன் விரைந்தவர்களாக வருவார்கள். நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “இது ஒரு சிரமமான நாள்.”
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்கள் பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் நமது அடியாரை பொய்ப்பித்தனர். (அது மட்டுமா!) அவர் ஒரு பைத்தியக்காரர் என்று(ம்) கூறினர். இன்னும் அவர் (அவர்களால் கடுமையாக) எச்சரிக்கப்பட்டார்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஆகவே, அவர் தனது இறைவனிடம், “நிச்சயமாக நான் தோற்கடிக்கப்பட்டேன். ஆகவே, நீ பழி தீர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஆகவே, நாம் அடை மழையைக் கொண்டு மேகத்தின் வாசல்களை திறந்து விட்டோம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் பூமியை ஊற்றுக் கண்களால் பீறிட்டு ஓடச்செய்தோம். (வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும்) தண்ணீர் திட்டமாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்தின் மீது சந்தித்தன.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவரை பலகைகள் இன்னும் ஆணிகள் உடைய (-பலகைகள் இன்னும் ஆணிகளினால் செய்யப்பட்ட) கப்பல் மீது பயணிக்க வைத்தோம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அது நமது கண்களுக்கு முன்பாக (-நமது பார்வையில் நமது கட்டளைப் படி) செல்கிறது, நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு கூலி கொடுப்பதற்காக.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    திட்டவட்டமாக அதை நாம் ஓர் அத்தாட்சியாக விட்டுவைத்தோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    எனது வேதனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஆது சமுதாயம் பொய்ப்பித்தது. எனது வேதனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக நாம் அவர்கள் மீது குளிர்ந்த சூறாவளிக் காற்றை (நரகம் வரை நீடித்து இருக்கும்) நிலையான ஒரு தீமையுடைய நாளில் அனுப்பினோம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அது மக்களை கழட்டி எரிந்தது. அவர்கள் வேரோடு சாய்ந்த பேரீட்ச மரத்தின் பின் பகுதிகளைப் போல் ஆகிவிட்டார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    எனது வேதனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    சமூது சமுதாயம் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    எங்களில் இருந்து ஒருவராக இருக்கின்ற ஒரு மனிதரையா நாங்கள் பின்பற்றுவோம்! அப்படி என்றால் நிச்சயமாக நாங்கள் வழிகேட்டிலும் சிரமத்திலும் ஆகிவிடுவோம் என்று கூறினர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    எங்களுக்கு மத்தியில் அவருக்கு மட்டும் இறைவேதம் இறக்கப்பட்டதா? இல்லை, அவர் பெருமையுடைய பெரும் பொய்யர் ஆவார்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நாளை அவர்கள் விரைவில் அறிவார்கள், “பெருமையுடைய பெரும் பொய்யர் யார்”என்று?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக நாம் பெண் ஒட்டகத்தை அவர்களுக்கு சோதனையாக அனுப்புவோம். அவர்களிடம் (அவர்களுக்கு வர இருக்கின்ற வேதனையை) நீர் எதிர்பார்த்திருப்பீராக! இன்னும் பொறுமை காப்பீராக!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக தண்ணீர் (ஒட்டகம் நீர் குடிக்காத நாளில்) அவர்களுக்கு மத்தியில் (சமமான) பங்காகும் என்று அவர்களுக்கு அறிவிப்பீராக! தண்ணீர் குடிக்கப்படுகின்ற எல்லா நேரங்களிலும் (அந்த அந்த நேரத்திற்குரியவர்கள்) ஆஜராக வேண்டும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (அந்த ஒட்டகத்தைக் கொல்வதற்காக) அவர்கள் தங்கள் தோழரை அழைத்தனர். அவன் (தனது கரத்தால் அதைப்) பிடித்து, அறுத்தான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    எனது வேதனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு சப்தத்தை அனுப்பினோம். அவர்கள் தொழுவத்தின் தீணிகளைப் போல் ஆகிவிட்டனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    லூத்துடைய மக்களும் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக அவர்கள் மீது நாம் கல் மழையை அனுப்பினோம், லூத்துடைய குடும்பத்தார்களைத் தவிர. அவர்களை நாம் அதிகாலையில் பாதுகாத்தோம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நம்மிடமிருந்து (அவர்கள் மீது) அருட்கொடையாக (நாம் அவர்களை பாதுகாத்தோம்). இவ்வாறுதான் நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    திட்டவட்டமாக நமது தண்டனையை அவர் அவர்களுக்கு எச்சரித்தார். அவர்கள் அந்த எச்சரிக்கையை சந்தேகித்தனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    திட்டவட்டமாக அவர்கள் அவரிடம் அவரது விருந்தினர்களை வேண்டி (விருந்தினர்களிடம் தங்கள் ஆசையை தனித்துக் கொள்ள) அடம்பிடித்தனர். நாம் அவர்களின் கண்களை (அழித்து முகத்தோடு முகமாக) சமமாக்கி விட்டோம். ஆகவே, என் தண்டனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அதிகாலை சூரியன் விடிவதற்கு முன் (நரகம் வரை தொடர்ந்து) நிலைத்திருக்கக்கூடிய வேதனை காலையில் அவர்களை திட்டவட்டமாக வந்தடைந்தது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஆக, என் வேதனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    திட்டவட்டமாக ஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்கு (நமது) எச்சரிக்கை வந்தன.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவர்கள் நமது அத்தாட்சிகளை எல்லாம் பொய்ப்பித்தனர். ஆகவே, மிக்க மிகைத்தவன், மகா வல்லமை உடையவனின் தண்டனையால் அவர்களை தண்டித்தோம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    உங்களுடைய (இக்கால) நிராகரிப்பாளர்கள் (முந்திய நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை விட சிறந்தவர்களா? (நீங்கள் திருந்தவில்லை என்றால், அவர்களுக்கு வந்த வேதனை உங்களுக்கும் வரும்.) அல்லது (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து பாதுகாப்பிற்குரிய) விடுதலை பத்திரம் (முந்திய) வேதங்களில் உங்களுக்கு இருக்கிறதா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லது, நாங்கள் (எங்களை பிரிக்க நினைப்பவர்களிடம்) பழிதீர்த்துக் கொள்கின்ற கூட்டம் ஆவோம் என்று அவர்கள் கூறுகின்றார்களா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    விரைவில் இந்த கூட்டங்கள் தோற்கடிக்கப்படுவார்கள். புறமுதுகு காட்டுவார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    மாறாக, மறுமைதான் இவர்களின் (முழுமையான தண்டனைக்கு) வாக்களிக்கப்பட்ட நேரமாகும். மறுமை மிக பயங்கரமானதும் மிக கசப்பானதுமாகும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக குற்றவாளிகள் வழிகேட்டிலும் (இணைவைப்பின்) மிகப் பெரிய சிரமத்திலும் இருக்கின்றனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நரகத்தில் அவர்களின் முகங்கள் மீது அவர்கள் இழுக்கப்படும் நாளில், “சகர் நரகத்தின் கடுமையை சுவையுங்கள்!” (என்று அவர்களுக்கு கூறப்படும்).
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் (விதியின் தாய் புத்தகத்தில் நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவில் படைத்தோம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நமது கட்டளை (ஆகு என்ற) ஒன்றைத் தவிர வேறு இல்லை. கண் சிமிட்டுவதைப் போல் (உடனே அது ஆகிவிடும்).
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (உங்களைப் போன்ற) உங்கள் சக கொள்கையுடையவர்களை (இதற்கு முன்னர்) நாம் திட்டவட்டமாக அழித்தோம். நல்லுபதேசம் பெறுபவர் யாரும் உண்டா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவர்கள் செய்த எல்லா விஷயங்களும் (வானவர்கள் எழுதிய செயல்) ஏடுகளில் (பதியப்பட்டு) உள்ளன.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    எல்லா சிறியவையும் பெரியவையும் எழுதப்பட்டு உள்ளது. (அதற்கேற்ப அவர்களுக்கு கூலி கொடுக்கப்படும்.)
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களில் இன்னும் நதிகளில் இருப்பார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (வீண் பேச்சுகள் அற்ற) உண்மையான பேச்சுகளுடைய சபையில், மகா வல்லமையுடைய பேரரசனுக்கு அருகில் இருப்பார்கள்.